புதன், 14 ஜூலை, 2021

நீட் தேர்வு முறையில் மாற்றம்.. சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை அறிமுகம்!

tamil.oneindia.com - vishnu-priya : டெல்லி: நீட் தேர்வு முறையில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகமாகியுள்ளது.மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

வழக்கமாக நீட் தேர்வில் 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது இந்த ஆண்டு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல்முறையாக சாய்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு பாடத்திலும் ஏ பிரிவில் 35, பி பிரிவில் 15 என 4 பாடங்களுக்கு தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறவுள்ளன. இவற்றில் 180 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது.

ஒரே நேரத்தில் நீட் தளத்தில் குவிந்த மாணவர்கள்.. நீட் இணையதளம் தளம் முடங்கியது 

ஒரே நேரத்தில் நீட் தளத்தில் குவிந்த மாணவர்கள்.. நீட் இணையதளம் தளம் முடங்கியது        விடைத்தாளில் தவறான விடை அளித்தால் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். பதில் அளிக்காத கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது என்ற பழைய நடைமுறையே தொடரும்.

நீட் தேர்வு தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒடியா என 11 மொழிகளில் தேர்வு நடந்தது. தற்போது மலையாளம், பஞ்சாபி மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இனி 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

 

கருத்துகள் இல்லை: