சனி, 3 ஏப்ரல், 2021

போலீசாரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்த பெண் ..மாறி மாறி பலாத்காரம் செஞ்சாங்க, எந்த இடம்னு தெரியல', தஞ்சை அருகே

  Divakar M | Samayam Tamil: தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்காக்கு உட்பட்ட மேலதிருப்பந்துருத்தி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், விசாரணை என்ற பெயரில் வெப்படை போலீசார் தன்னை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த புகார் தொடர்பான வழக்கை தஞ்சை எஸ்பி தலைமையில் பெண் டிஎஸ்பி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
அதாவது, பாதிக்கப்பட்ட பெண் அவருக்கு நடந்ததாக கூறிய மனுவில், எனது நண்பரை கைது செய்த வேப்படை போலீசார் என்னிடமும் விசாரிக்க வேண்டும் என அழைத்தனர்.
அதன் பேரில் சென்ற என்னை,வேப்படை சிறப்பு போலீசார் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு ஏதோ ஒரு கட்டடத்துக்கு கொண்டு சென்று ஒரு அறைக்குள் அடைத்து பூட்டி விட்டனர். பின்னர் மது குடித்தவர்கள் என்னை மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.
10 மணி நேரம் என்னை விடாமல் வன்கொடுமை செய்தனர்'' என்று அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி தாரணி, இந்த வழக்கு தஞ்சை எஸ்பி தலைமையில் பெண் டிஎஸ்பி விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

1 கருத்து:

Unknown சொன்னது…

உதயநிதியின் இளைஞரணி பாசறையைச் சேர்ந்த இளைஞர்கள் ஆக இருக்கலாம்