ஞாயிறு, 28 மார்ச், 2021

ஆந்திராவில் பயங்கர சாலை விபத்து... சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு!

nakkeeran : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் அருகே பூஜ்ஜிரெட்டிபாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: