வெள்ளி, 2 ஏப்ரல், 2021

570 கோடி….. சி.பி.ஐ விசாரிக்காது… டீல்… பங்கு… கமிஷன்… ப்ளாக் மெயில் .. பிடிபட்டதும் பேச்சு வார்த்தை . பேசிக்கிறாய்ங்க flashback

dhinamalar :   ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க…
இந்த பணம் முழுக்க  உயிரை பறித்த டாஸ்மார்க் பாவப்பணம். இதை மதுவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டும்.

கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம். கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம். இட்லி பிடிபட்ட 3 கன்டைனர்களிலும் ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும் 30 பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம். மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி. ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான் பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம். இட்லியை 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம், பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும் அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்ய போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம். இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும் பரிமாறபட்டதாம்.

உலகம் சுற்றும் சுற்றுலா பயணிக்கு தெரிந்தே இட்லி இந்த வேலையை செய்து முடித்தாராம்.. தற்போது தே.கமிசன் வாயாலே இது அந்த வங்கிக்கு சொந்தமானது என்று சொன்ன பிறகுதான் தலைவிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம். ஊருக்குள்ள பேசிக் கிட்டாங்க… உண்மைங்களா…?

2.  நீதித்துறையும் தற்பொழுது பத்திரிக்கைதுறை போலதான். பணம் கொடுத்தால் எந்த வழக்கையும் ஏற்பார்கள். அல்லது பணம் கொடுத்தால், இந்த வழக்குகளை எடுக்கமாட்டார்கள். முன்பு ஜல்லிக்கட்டு விசயத்தில், எத்தனையோ வழக்குகள் தேங்கி இருக்க, ஒரே நாளில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஏன் என்று யாருக்காவது தெரியுமா ?…

3.   ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை கொடுத்ததும் வெகுண்டெழுந்த சுப்ரீம் கோர்ட் இதையெல்லாம் கண்டு கொள்ளாது. நீதியை தொலைப்பதே இந்திய நீதிமன்றங்கள் தான்.

4.  என் கணிப்புப்படி இந்த பணம் தேர்தல் முடிவுக்கு பின் கைப்பற்ற பட்டுவிடுமோ என்ற பயத்தினாலே வேறு இடத்திற்கு இதை பாதுகாப்பாக எடுத்து செல்லும் முயற்சி… தோல்வியின் பயம் காரணமாகவே இப்பணம் இடம் மாறுகிறது…. கிடைத்த வரைக்கும் இப்பணத்தையாவது பாதுகாப்போம் என்று.

5.  சி பி ஐ விசாரணை தேவை இல்லை. ஒரு ஏட்டையா விடம் வழக்கை கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் விசாரணையை முடித்து உண்மையை கண்டுபிடிப்பார். மூன்று கண்டைனர் லாரிகள். தலா ஒரு டிரைவர் கீளினர் இருப்பார்கள். 6 பேரையும் தனித்தனியாக விசாரித்தால் பணம் எங்கே வைத்து வாகனங்களில் ஏற்றப்பட்டது என்பது தெரிந்துவிடும்.இதுக்கு போய் சி பி ஐ விசாரணை எல்லாம் தேவை இல்லை. ஆனால் நான் சொல்லும் ஏட்டையா அந்த காலத்து பழைய காலத்து ஏட்டையாவாக இருக்கவேண்டும். அருண் ஜெ இத்தாலி காலத்து ஏட்டையாவாக இருக்கக்கூடாது. dinamalar.com

கருத்துகள் இல்லை: