ஞாயிறு, 28 மார்ச், 2021

தேர்தலை உல்லாசமாக அனுபவிப்பது கமல ஹாசன் only .... Kamal and Akshara helicopter

 முருகவேள் : இந்தத் தேர்தலை ஒரே கொண்டாட்டமாக அனுபவித்துக் கொண்டிருப்பது கமல் தான்.
தாஜ் 'விவாந்தா'வில் மூன்று நான்கு. 37 ஆயிரம் ரூபாய் சூட்கள்!.
அப்படியே காலையில் வெளியே வந்தால் ரேஸ்கோர்ஸ். வாக்கர்களிடம் வாக்கிங்கோடு வாக்கிங்காக  லைட்டாக ஒரு பிரச்சாரம். மாலையில் லக்ஸுரி காரில் ஒரு ரவுண்ட்.
ஏதாவது பஸ் ஸ்டாண்ட்,  அல்லது  நாற்சந்தி என்று நின்று, 'மாற்றுவோம், வீழ்த்துவோம், ஒளி ஏற்றுவோம், காமராஜ், கலாம் என்று பேச்சு!' பின்பு திரும்பவும் விவாந்தா.
இடைப்பட்ட நேரத்தில் ஹெலிகப்டரில் ஏறி காங்கேயம், உடுமலை என்று ஒரு ரவுண்ட். சினிமாவுக்கு லொகேஷன் பார்த்தது போலவும் ஆயிற்று.
'ஒப்பணக்கார வீதியில் அண்டர் கிரவுண்டு கிராசிங் கட்டுவோம். ஒவ்வொரு வார்டிலும் எம்எல்ஏ அலுவலகம் என்று பொத்தாம் பொதுவாக வாக்குறுதிகள்!'


ஸ்டாலின், எடப்பாடி, சீமான் மாதிரி கட்சி தலைவர்கள்லாம் தன் தொகுதில ஒருநாள் பிரச்சாரம் பண்ணிட்டு, மத்த தொகுதிக்கு பிரச்சாரம் பண்ணி ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் சுத்திவறாங்க!
எவன் எப்டி போனா என்னனு மய்யம் 25 நாளா பீளமேடு பஸ்ஸ்டாண்டுல பெட்ஷீட் போட்டு தூங்கி காலைல வாக்கிங் போய்கிட்ருக்காரு!
இவரை நம்பி நின்ன மத்த வேட்பாளர்களின் நிலை என்ன..?
வாழ்கிறாரைய்யா மனிதர்.

கருத்துகள் இல்லை: