சனி, 3 ஏப்ரல், 2021

டோல்கேட் வழிப்பறி கொள்ளை! கேரளத்தில் 3 டோல் கேட் ஆனால் தமிழகத்தில் 52 டோல் கேட்

டாக் நியூஸ்  :கேரளத்தில் 3 டோல் கேட் ஆனால் தமிழகத்தில் 52 டோல் கேட்???
தமிழ்நாட்டில் "டோல்கேட்" மூலம் வாகனங்களை இயக்குபவர்களிடம் வழிப்பறிக் கொள்ளை நடக்கிறதா?
இதிலென்ன சந்தேகம்..
கேரளாவில்,
1,782 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும், 3 டோல்கேட்களே உள்ளன.
15,437 கி.மீ. தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட மகாராட்டிராவில் 44 டோல்கேட்களே உள்ளன.
5,381 கி.மீ .தூரமே நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 52 டோல்கேட்கள் உள்ளன.
ஆக , கேரளாவுடன் ஒப்பிடும் போது, 9 டோல்கேட்களும்,
மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும் போது, 15 டோல்கேட்களுமே இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் உள்ள டோல்கேட்களின் எண்ணிக்கை 74.
இது பணம் பிடுங்கலா? இல்லையா?
ஏன் இப்படி தமிழகத்தில் மட்டும் இப்படி அதிக அளவில் டோல்கேட்டுகள்?
எதேனும் சிறப்புக் காரணங்கள் இருக்கிறதா இதற்கு? தார் போடும்போது தங்கத்தைக் கலக்குகிறார்களா?
அல்லது தமிழர்கள் ரொம்ப நல்லவர்கள் என்பதாலா?
நம்மிடம் இருப்பது வெறும் கேள்விகள் மட்டுமே?

கருத்துகள் இல்லை: