வெள்ளி, 18 டிசம்பர், 2020

லிபியா அதிபர் கடாபியின் பொற்காலம்! உலகம் மறந்த வரலாறு !

 

Sundar P : · மறுபக்கம்...... அமெரிக்காவால் சர்வாதிகாரி என்று பிரகடனப்படுத்தப்பட்டு 2011 அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட கடாபியின் மறுபக்கம் இது:- பிரஞ்சு, இத்தாலி என்று மாறி மாறி அன்னியர்கள் ஆண்ட நாடு லிபியா. முடிவாக மன்னராட்சி ஏற்பட்டது. மன்னரும் இத்தாலியர்களுக்கு எடுபிடியாகவே இருந்தார். ராணுவப் புரட்சி வெடித்தது. புரட்சிக்குத் தலைமை வகித்தவர் கடாபி. 1969 முதல் 2011 வரை அசைக்கமுடியாத தலைவராக விளங்கினார். ஃபிடல் காஸ்ட் ரோ, யாசர் அராபத் வரிசையில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கடாபி கடாபியின் ஆட்சி லிபியாவின் பொற்கால ஆட்சி.

அன்று,  லிபியாவில் வழங்கப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் ஏதும் கிடையாது, மின்சாரம் இலவசம்.
• வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
• வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது
• அந்த நாட்டில் திருமணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
• லிபியாவில் கல்வி இலவசம். ஆரம்பக் கல்வி மட்டுமல்ல, உயர் கல்வியும் இலவசம். வெளி நாட்டுக்குச் சென்று படிக்க விரும்பினாலும், அத்தனை செலவுகளையும் அரசே ஏற்கும்.
• மருத்துவம் முற்றிலும் இலவசம்,
• கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிபிய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.
• ஒரு குடிமகன் விவசாயம் செய்ய விரும்பினால் அவருக்கு வாழ ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது
• லிபியர்களுக்கு மருத்துவ வசதி பெறுவதற்கு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமெனில் அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.
• ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் பாதித் தொகையை அரசு இலவசமாக வழங்கியது
• அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் ரூ.8/- ($ 0.13) மட்டுமே.
• லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.
• உயர் கல்வி கற்று பட்டதாரியாகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அரசு மாத மாதம் வழங்கி வந்தது.
• அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இட்டு வந்தது அந்த அரசு
• பிரசவத்தின் போது தாய்க்கு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு இணையான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து எழுபத்தி நாலாயிரம் ரூபாய்.
• 40 ரொட்டிகள் வெறும் 0.15 தினார் மட்டுமே
• 25% லிபியர்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாவர்.
• உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆற்றை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு

கருத்துகள் இல்லை: