சனி, 19 டிசம்பர், 2020

உங்கள் குலத் தொழில்.... பகவான் உங்களுக்கென்று உருவாக்கியிருக்கிறார் . முதல்வர் இராஜகோபாலாச்சாரி

Paneerselvan :
·  சென்னையில் சலவைத் தொழிலார் மாநாடு. 1952இல் குதிரை பேர அரசியலை தமிழகத்தில் முதன் முதலில் தோற்றுவித்து அதன் மூலம் ஆட்சிக்கு வந்த இராஜகோபாலாச்சாரி முதலமைச்சராய் இருந்த நேரம்-சலவைத் தொழிலாளர்கள் அவரை அழைக்கவும் இல்லை,நிகழ்ச்சி நிரலில் அவருடைய பெயரும் இல்லை.தபாலில் ஒரு அழைப்பிதழை முதல் அமைச்சர் முகவரிக்கு அனுப்ப அதை வைத்துக் கொண்டு மாநாட்டிற்கு வந்தவரை மேடையில் அமரச் செய்தனர்,நானும் பேச வேண்டும் கூற பேச அனுமதித்தனர்.சில கோரிக்கைகளையும் முதல்வருக்கு வைத்திருந்தனர் ... இறுதியாக பேசிய முதல்வர் இராஜகோபாலாச்சாரி-இங்கு ரொம்ப பேர் நல்லா பேசினா.ஆனா நீங்க மாத்தி சில கருத்துக்களை சொன்னது எனக்கு அறவே பிடிக்கல.யாரும் கோவிச்சக்கப் படாது.உங்க பிள்ளைகளை பள்ளி கூடத்திற்கு அனுப்புறேள்.
அது மிகப் பெரிய தப்பு.உங்க சொந்த தொழிலை நீங்க செய்யணும்.அது மிக அருமையான தொழில்.காலையில் எழுந்ததும்உங்க மூட்டையைத் சுமந்து கொண்டு வருகிற கழுதை எப்படி இருக்குது?  அதுக்கு ஆகாரம்
கொடுத்தமா ,என்பதைப் கவனிச்சு —அதை பேணி பாதுகாத்து அதற்கு மேலே மூட்டையைபோட்டுண்டு ஆறு குளம் போயி அங்கு துணியைச் நன்னா சலவை செஞ்சு காய வச்சுமடிச்சு கொண்டு வரணும்..
இது உங்கள் கடமை.உங்கள் குலத் தொழில்.. பகவான் உங்களுக்கென்று ஒரு பணியை உருவாக்கியிருக்கிறார்  
இதிலே இருந்து நீங்கள் மாறப்படாது.அதை நீங்க அப்படியே பின் பற்றணும்.
சில பேர் இங்கே பேசும் போது நாம மாறணும். நம்ம பிள்ளைகளை பள்ளி கூடம் அனுப்பணும்  என்று பேசுவதை நான் கேட்டுண்டுதான் இருந்தேன்.
அந்த மாதிரி வழிகளெல்லாம் வேண்டாம்.காலம் கெட்டுடும் ‘கலிமுத்துது’என்பது இதையொட்டிதான் வருது.
அடுத்ததா சோடாக்காரம் வேணும் அதை அரசாங்கம் சலுகை விலையில் கொடுக்கணும்னு தீர்மானம் போடப் போறத சொல்லிக் கொண்டிருக்கேள்.
அது அறவே கூடாது.நீங்க உவர் மண்ணுலேயே சலவை பண்ணுங்க என்று பேசி விட்டு சென்றார்.
எண்ணிப் பாருங்கள்.திராவிடர் இயக்கமும்-
தலைவர் தந்தை பெரியாரும் அன்றைக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து மக்களிடம் எழுச்சியை உண்டாக்கி-அதன் எதிரொலியாய் காமராசரும் உட் கட்சிக்குள்
சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட இராஜினாமா செய்து விட்டு செல்ல
வேண்டிய நிர்பந்தம் ஏற்பட இராஜினமா செய்து விட்டு சென்றார் இராஜகோபாலாச்சாரி.
இன்றைக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை
ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து—பழையபடியும்
இங்கு குல கல்வித்திட்டத்தை புதிய முறையில் கொண்டு வரத்தானே?காவிகளும்
காவியின் B’டீம்கள் மய்ய பார்ப்பனரும்,பார்ப்பாத்தியை மணந்த சிவாஜிராவ் கெய்குவாட்டுகளும்,வாங்கிய
காசுக்கு உரக்க கத்திக் கொண்டிருக்கும்
சூத்திர்ர்களும் ,முயன்று கொண்டிருக்கிறார்கள்?

கருத்துகள் இல்லை: