ஞாயிறு, 13 டிசம்பர், 2020

ஹோட்டல் சாம்பார் ரகசியம்.. சிலருக்கு வீட்டு சாம்பார் சுத்தமாக பிடிக்காது?

tamil.indianexpress.com : hotel sambar recipe hotel samber making video : சிலருக்கு வீட்டில் செய்யும் சாம்பாரை சுத்தமாக பிடிக்காது. அதே ஹோட்டல் போனால் தோசைக்கும், இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். ஏனென்றால் ஹோட்டல் சாம்பார் சுவையாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதே போல் உங்கள் வீட்டில் யாராவது இருக்கிறார்களா?? 

சரி வாங்க சுவையான ஹோட்டல் சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.    முதலில் கத்திரிக்காய், கேரட், உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் முதலியவற்றை சாம்பாருக்கு ஏற்றவாறு நறுக்கி கொள்ள வேண்டும். புலி கரைசல் கரைத்து வடி கட்டி கொள்ளவும். பாசி பருப்பு, துவரம் பருப்பு ஆகியவை அலசி கொண்டு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் அலசிய பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவை கொண்டு கொதிக்க விட வேண்டும்.

பிறகு கத்திரிக்காய்,கேரட்,உருளைக் கிழங்கு,தக்காளி,வெங்காயம்,கரைத்து வைத்த புலி கரைசல் ஆகியவை பருப்பில் சேர்த்து கொதிக்க விடவும்.காய் வெந்தவுடன் அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கபட்டுள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தாளித்த பொருளை சாம்பாரில் சேர்த்து கடைசியாக கொத்தமல்லி தூவி சாம்பாரை இறக்கி விட வேண்டும்..

கருத்துகள் இல்லை: