திங்கள், 5 ஆகஸ்ட், 2019

ப.சிதம்பரம் : இந்தியா சிதைவதற்கான தொடக்கம் இது’ மாநிலங்கள் அவையில் .. வீடியோ


tamil.news18.com : இந்தியா சிதைவதற்கான தொடக்கம் இது’ -
மாநிலங்களைவில் ப.சிதம்பரம் ஆதங்கம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றம் எடுத்துக் கொண்டுவிடும்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம், ‘நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் தவறு செய்துள்ளீர்கள். இந்த முடிவு தவறு என்று வரலாறு நிரூபிக்கும். இந்த மாநிலங்களவை இன்று மிகப் பெரும் தவறை செய்துள்ளது என்று வரும் கால தலைமுறை உணரும். இன்று, நீங்கள் என்ன செய்தீர்களோ, அது தவறான ஒரு அறிவிப்பை மாநிலங்களுக்கு அளித்துள்ளது. நாங்கள் இங்கே அமர்ந்திருப்போம். உங்களை கவனிப்போம். உங்களுக்கு எதிராக வாக்களிப்போம்.

இந்த அரசு எளிதாக 370-வது பிரிவை நீக்கவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மற்றும் 3-வது பிரிவை தவறாக புரிந்துகொண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்துள்ளது. தற்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தச் செயலை செய்ய முடிந்தால் பின்னாட்களில் எல்லா மாநிலங்களுக்கும் இந்தச் செயலை செய்ய முடியும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றம் எடுத்துக் கொண்டுவிடும். அரசு தீர்மானத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று மாநிலத்தை மாற்றியமைக்க முடியும்.
மாநிலங்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதுதான் மாநிலங்களவையின் பணி. ஆனால், மாநிலங்களின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றன. மாநிலங்களின் அதிகாரங்கள், மாநகராட்சிகளின் அதிகாரங்களைப் போல மத்திய அரசால் மதிக்கப்படுகின்றன. நகராட்சி அதிகாரங்கள் போல குறைக்கப்படுகின்றன’ என்று வேதனை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: