ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

ஜம்மு காஷ்மீரில் தாக்குதலுக்கு பாக். பிரதமர் இம்ரான் கான் கண்டனம்


Imran Khan : I condemn India's attack across LOC on innocent civilians & it's use of cluster
munitions in violation of int humanitarian law and it's own commitments under the 1983 Convention on Certain Conventional Weapons. UNSC must take note of this international threat to peace & security.
Imran Khan : It is time to end the long night of suffering for the people of Occupied Kashmir. They must be allowed to exercise their right to self determination according to UN SC resolutions.The only road to peace & ; security in South Asia runs through a peaceful & just settlement of Kashmir
Imran Khan : President Trump offered to mediate on Kashmir. This is the time to do so as situation deteriorates there and along the LOC with new aggressive actions being taken by Indian occupation forces. This has the potential to blow up into a regional crisis.
thinathanthi : இஸ்லாமாபாத், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அங்கு ராணுவ வீரர்கள் நேற்று கூடுதலாக குவிக்கப்பட்டனர். காஷ்மீருக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினருக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.< இதனிடையே, இந்திய எல்லைக்குள் கெரான் பிரிவில் ஊடுருவும் முயற்சியாக பாகிஸ்தானிய அதிரடி படையினர் ஈடுபட்டனர்.  அவர்களை இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து தடுத்தது.  தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானிய அதிரடி படையினர் மற்றும் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.  அவர்களின் உடல்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிடக்கின்றன.   அவர்களின் உடலை எடுத்து செல்ல பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த பகுதியை தவிர குரேஷ், மச்சில், டங்தார் பகுதிகளிலும் , பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.&
இந்நிலையில்,  எல்லையில் நடந்த தாக்குதலுக்கு பாக். பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள்.  சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் சமரசம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு துன்பத்திற்கான நீண்ட இரவை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது என பதிவிட்டுள்ளார்.<

கருத்துகள் இல்லை: