tamil.oneindia.com - shyamsundar.:
இஸ்லாமாபாத்:
காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததை அடுத்து இந்தியாவுடன்
பாகிஸ்தான் மொத்தமாக உறவை முறித்துள்ளது. 5 முக்கியமான முடிவுகளை
பாகிஸ்தான் தற்போது எடுத்துள்ளது.ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து பெரிய எதிர்வினையாற்றாமல் இருந்த பாகிஸ்தான் தற்போது இதில் ராஜாங்க ரீதியான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
முதலில் என்ன ?
அதன்படி முதற்கட்டமாக, இந்தியாவுடன் அனைத்து விதமான தூதரக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொள்கிறது. எந்த விதமான அரசு தொடர்பான உறவுகளும் இனி இருக்காது. இரண்டு நாட்டு தூதராக அதிகாரிகளும் சொந்த நாட்டிற்க்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
என்ன உறவு? இரண்டு நாட்டிற்கு இடையில் இருந்த வர்த்தக உறவும் முடிவிற்கு வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையில் இனி எந்த விதமான ஏற்றுமதி, இறக்குமதியும் இருக்காது. வாகா எல்லை மூடப்படும். பேருந்து போக்குவரத்து கூட இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக