திங்கள், 20 மே, 2019

100 வீதம் பொய்யான கருத்து கணிப்புகள்? .. அல்லது EVM தில்லுமுல்லு நடக்கிறது ?

 Swathi K : அடிப்படை அரசியல் அறிவை வைத்து யோசித்துப்பாருங்கள்..
இது IndiaToday + AxisMyIndia கணிப்பு..
1. ஒரிசாவில் நவீன் பட்நாயக்கின் BJD ஒரு இடத்திலும் வெற்றி பெறாது.. அனைத்து இடத்திலும் பிஜேபி வெற்றி பெறும்..
2. மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியை விட பிஜேபி அதிக இடங்களில் வெற்றி.
3. உத்திர பிரதேசத்தில் சென்றமுறை வெற்றி பெற்றது போல பிஜேபி வெற்றி பெறும்.. மாயாவதி+அகிலேஷ் சேர்ந்து 10 இடங்களில் தான் வெற்றி..
4. கர்நாடகாவில் 25/ 28 இடங்களில் பிஜேபி வெற்றி பெறும்..
5. பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், அசாம், ஜார்கண்ட், ஹரியானா மாநிலங்களில் அனைத்து தொகுதியிலும் பிஜேபி வெற்றி பெறும்.
6. தெலுங்கானாவில் 3 இடங்களில் வெற்றி (5 மாதத்திற்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் கூட ஒரு இடத்தில் தான் பிஜேபி வெற்றி..)

ஒட்டுமொத்தமாக 2014ல் பிஜேபி வெற்றி பெற்றதை விட மாபெரும் வெற்றி பெறும்.. இதுதான் கணிப்பு.. என்ன காரணத்திற்காக வெற்றி பெறும் என்று யாருக்கும் தெரியாது.. ஆனால் வெற்றி பெறும்..
இரண்டு வாய்ப்பு தான்..
1. கருத்து கணிப்பு எல்லாமே 100% பொய்யாக இருக்கவேண்டும்..
Or
2. தேர்தல் முடிவுகள் ஏற்கனவே EVMல் உறுதி செய்யப்பட்டு.. அதற்கு ஏற்ற மாதிரி கணிப்புகள் ரெடி செய்யப்பட்டு இருக்கவேண்டும்..
இந்த இரண்டையும் தாண்டி அடிமுட்டாள்களான பிஜேபிகாரனே இந்த கணிப்புகளை நம்ப மாட்டான்..

மேலே சொன்ன இரண்டில் எது உண்மை என்று மே23ல் தெரியும்.


Dason Yesudaon  :கடந்த ஐந்தாண்டுகள் மீடியாக்கள் பீஜேபிகளால் விலைக்கு வாங்கபட்டு கருத்து கணிப்புகளை திணித்து கொண்டு வந்தனர்.. ஐந்து மாநில தேர்தல்கள் தமிழக இடைதேர்தல் மற்றும் மோடியின் நிர்வாக திறமையின் மகத்துவத்தை பணநாயகத்தால் மீடியாக்கள் சாய்க்கபட்டு சொன்ன கருத்துக்களை காட்டிலும் வேறான ரிசல்ட்டுகள் தான் கிடைத்தது.. கழிந்த கால exit poll resultகள் ஆளும் கட்சிகளுக்கு துதிபாடி மூக்கறுப்பு பெற்று கொண்டனர் என்பது தான் வரலாறு.. இப்போதும் அப்படித்தான்.. நிழலை நிஜமாக்க நினைக்கிறார்கள்.. நிஜம் பூதகரமாக இருக்கும்...பார்ப்போம்

Syed Khader Hussain : இவர்கள் வாக்கு இயந்திரத்தில் ஊழல் வேலையை நிறைவேற்றிவிட்டார்கள். அந்த முடிவை மக்கள் சந்தேகிக்க கூடாது என்பதற்காகவே இந்த தேர்தல் முடிவுக்கு முந்தைய கருத்து கணிப்பு நாடகம்...
Hyder Ali : தேர்தல் முடியும் வரை காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை பெறும் என எழுதிய பெரும்பாலான ஊடகவியலார்களை தேர்தல் முடிந்த தினத்தன்றே மாற்றி எழுத வைக்க முடியுமென்றால் பணநாயகமே வெல்லும் ஜனநாயகம் வீழும் என்று விளங்குவதே சரி.

Kad Gani Rawuthar :கவலை கொள்ளவேண்டாம்...பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் என்று அதன் தலைவர்களுக்கே நம்பிக்கையில்லை...மக்களின் மனநிலையும்,வாக்குகளும் பிஜேபிக்கு எதிரானது.தலைகீழாக நின்றாலும் EVM கோல்மால்களையும் சேர்த்தே பிஜபி கூட்டணி 150 சீட்களுக்கு மேல் வராது...இந்த EXIT POLL முடிவுகள் ஒரு கண்துடைப்பு...

கருத்துகள் இல்லை: