வியாழன், 23 மே, 2019

தேனீயில் பன்னீரின் மகன் முன்னணியில் .. இளங்கோவன் பின் தங்குகிறார் .. அந்த 20 evm திருட்டு வேலை செய்கிறது?

நக்கீரன் : இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியில் இருந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பின்னடைவில் இருக்கின்றனர்.தேனி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட  38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.இதனால் அதிமுக கூட்டணியில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ள ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் என்று சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை: