
தூத்துக்குடி சிவன் கோவிலில் நடந்த இந்த திருமணத்தை பதிவு செய்ய முடியாது என கோவில் நிர்வாகம் மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருநங்கை திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து தூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் அருண்குமார், ஸ்ரீஜா திருமணம் பதிவு செய்யப்பட்டது. தமிழகத்திலேயே திருநங்கை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக