சனி, 23 ஜூன், 2018

மன்சூர் அலிகான் சிறையில் உண்ணாவிரதம் .... எட்டுவழிசாலைக்கு தொடர் எதிர்ப்பு ...

tamilthehindu :சேலம் அருகே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர்
அலிகான் சென்னை - சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இன்று முதல் சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது: ’’தமிழக அரசு கொண்டுவந்துள்ள சென்னை -சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்துப் பேசிய மன்சூர் அலிகான், இத்திட்டம் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறினார்.
தமிழக அரசு இந்த எட்டுவழிச்சாலை திடடத்திற்கு ரூ .10 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக, ''[அரசு இத்திட்டத்தை கொண்டுவந்தால் எட்டு பேரை வெட்டுவேன்'' என்று மிரட்டல் விடுத்தார். கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதால் கடந்த 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று, சேலம் மாவட்ட நீதிமன்றம், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இந்நிலையிலில், மன்சூர் அலிகான் சென்னை - சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இன்று முதல் சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.''
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தங்கள் பகுதி சுற்றுச்சூழலும் நீராதாரமும் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு பரவலான எதிர்ப்பும் உருவாகி வருகிறது.
இத்திட்டத்தை எதிர்த்து சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருவண்ணாமலையில் வரும் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் திமுக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: