
கூட்டத்தில் காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும், இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு துணைபோவதாகவும் குற்றம்சாட்டி பேசினார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழக அரசு செயல்படுவதால் மாநில உரிமைகள் பறிபோவதாகவும், பேசினார்கள். எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று பலர் பேசினார்கள்.
அதன்பின்னர், ஏப்ரல் 2-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளனர்.
இதேபோல் ஸ்டெர்லைட் விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தக் கோரியும், கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்தாத கூட்டுறவு ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக