வியாழன், 29 மார்ச், 2018

டாடா மோட்டார்ஸின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து !

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!tamil.samayam.com :நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!
நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது. முழுப் பயன்பாட்டுக்கு வரும் முன்னர், பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து செயல்பாட்டில் டாடா ஸ்டார்பஸ்ஸின் புதிய ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜின் தண்ணீர் மற்றும் வெப்பத்தால் இயக்கப்படுவதால் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பில்லை. மாசுபாடு மட்டுமின்றி, சத்தத்திற்கும் இடமில்லை.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!
டாடா ஸ்டார்பஸ்ஸின் எரிபொருள் அமைப்பு 114 குதிரைத் திறனும், எலக்ட்ரிக் புரொபல்ஷன் மோட்டார் மூலம் 250 குதிரைத் திறனும் உருவாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த டர்க்யூ 800 rpmக்கு, 1050 Nm உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பேருந்தில் 30 பயணிகள் அமரலாம்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!வழக்கமான இன்ஜின்கள் கொண்ட பேருந்துகள் 20% அளவிற்கு வேதியியல் சக்தியை ஆற்றலாக மாற்றுகிறது. ஆனால் ஸ்டார்பஸ் எரிபொருள் இன்ஜின் கொண்ட பேருந்துகளில் 40-60% அளவிற்கு வேதியியல் சக்தியை ஆற்றலாக மாற்றுகிறது. அதாவது மூன்று மடங்கு அதிகம். ஸ்டார்பஸ் எரிபொருள் வாகனங்கள் எரிபொருள் பயன்பாட்டை 50% அளவிற்கு குறைக்கின்றன.
நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து இதுதான்!
ஹைட்ரஜன் ஆற்றல் கொண்ட டாடா ஸ்டார்பஸ் எரிபொருள் பேருந்து, பூஜ்ய கழிவு வெளியீட்டு வாகனமாக திகழ்கிறது. புறநகர் போக்குவரத்திற்கு சிறந்த வாகனமாக திகழ்கிறது. இந்த வாகன தயாரிப்பில் இஸ்ரோவும் கூட்டு சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மும்பை மாநகராட்சியிடம் இருந்து, ஹைபிரிட் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றில் டாடா மோட்டார்ஸ் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: