புதன், 28 மார்ச், 2018

ஜிண்டால் நிறுவனத்துக்காக சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமை சாலை

தக்ஷனமூர்த்தி: சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?
#சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் #
இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,#சென்னை - #சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார்,
இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய், தமிழ் நாட்டிற்கு #எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, #மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க #பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?
அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலையானது #கார்ப்பரேட் நிறுவனமான #ஜிண்டாலுக்காக.( Jindal steel) ஆம், #ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,
 #ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.

அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள #கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது. இரண்டாவது #திருவண்ணாமலை மாவட்டம் #கல்வராயன்மலையில் இருந்து #இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது, இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் #இரும்புத்தாது வளங்களை வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் #சென்னை துறைமுகத்துக்குகொண்டுச் செல்ல வேண்டும்.
அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள். அது தான் இந்த #சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமை சாலை. இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும். நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது. இதற்கு #தமிழக அரசும் உடந்தை. தயவு செய்து #தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்து கூடுமானவரை #ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள், #எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்.

கருத்துகள் இல்லை: