செவ்வாய், 27 மார்ச், 2018

தினத்தந்திக்கு எதிராக மக்கள் கடும் கோபம் .. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தந்தி குழுமம்

anantharamakrishnan .vikram :ஊடகங்களின் பார்வை மக்களின் போராட்டத்தின் மீது
விழவில்லை என எல்லோரும் கையில் மொபைல் வைத்து நோண்டினால் போதுமா... தூத்துக்குடி போராட்ட க்களத்தில் ஊடகங்கள் வராததைக் கண்டித்து ஏன் தலைநகரிலே ஒரு போராட்டத்தை துவக்கக்கூடாது. ஜல்லிக்கட்டுக்கு மெரினாவில் கூடியபோது மதுரையில் பாலத்தின் நடுவில் ரயிலை மறித்து நிறுத்தவில்லையா... தமிழகம் முழுவதும் மக்கள் ஆங்காங்கே கூடி போராட்டம் நடத்தவில்லையா.. அதுபோல் செய்யக்கூடாதா. நம் எல்லோருக்கும் நாட்டு நலனில் அக்கரையுள்ளது. போனில் போஸ்ட் போடுவது மட்டும் நாம் மக்களுக்குத்தரும் ஆதரவாகிவிடாது... இதை எல்லோரும் ஷேர் செய்யுங்கள். தலைநகரில் ஒரு போராட்டம் துவங்கி தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவை தந்தால் தானாக ஊடகங்கள் ஓடிவரும். ஏதாவது ஓர் புள்ளியிலிருந்துதான் துவக்கம் உருவாகும் இதுதான் அந்தப்புள்ளியானால் நல்லதுதானே...
Sathish Kongu Kvp #ஸ்டெர்லைட் ஆலை.... என்னோட கருத்தும் அதை மூடனும்கிறது தான் என் கருத்து மட்டுமில்லை அந்த ஆலை நிர்வாகத்தோட கருத்தும் அதே தான் அதிர்ச்சியாக இருக்கா?? கொஞ்சம் பின்னால் போய் பார்ப்போம்...... 2016 ல சென்னை உயர்நீதி மன்ற அனுமதியோடு ஸ்டெர்லைட் ஆலைய மூடிவிட்டு பூனா போய்விடுகிறோம் என சென்ற நிர்வாகத்தை ஆலைய மூடாதே, தொழிலாளர்கள் வாழ்வு அழிந்துவிடும் என உச்சநீதி மன்றம் சென்று ஆலையை தொடர வைத்தவர்கள் அதிலுள்ள கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் யூனியன் தான்.... இன்றைக்கு அதுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் அதே தோழர்கள் தான்....

Jamal Hussain ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் ஆனால் அது பணத்தால் அசிங்கபட்டுகொண்டிருக்கிறது நோட்டாவைகூட ஜெயிக்க முடியாத பிஜேபிக்காரன அதிகமா டிவியில காட்டுவானுக ஆனால் அவர்களைவிட சிறந்த பலரை கண்டுகொள்ளவே மாட்டார்கள் உதாரணம் யாருடைய ஆதரவும் இன்றி சீமானின் செல்வாக்குபரவுகிறது அதைகாட்டாமல் நூற்றிஐம்பது ஒட்டு வாங்க துப்புல்லாதவன்களை காட்டிகிட்டு இருப்பானுக இதுக்கு மாமா வேலை பார்க்கலாம் Vimal Poorni தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மிஞ்சிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.மீடியாக்கள் ஓடி ஒளி(ழி)ந்தன.சமூகவலைதளத்தில் மக்கள் இதனை வலுப்படுத்த வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: