செவ்வாய், 27 மார்ச், 2018

சசிகலா புஷ்பா கணவரின் இரண்டாவது மனைவி, சத்யப்பிரியா மீது வழக்கு... லஞ்சம் டெல்லி போலீசை வளைத்து விட்டது ..

Shankar A : · அருமை அண்ணனும் புஷ்பா புருசனுமான ராமசாமி அவர்கள்,
அவரின் முதல் மனைவி சத்யபிரியா மற்றும், சத்தியபிரியாவின் சகோதரர் ஆகியோர் அண்ணன் ராமசாமியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளை, கொடுமைப் படுத்தியதாக, டெல்லி காவல்துறையில், POSCO சட்டப் பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார். டெல்லி காவல்துறையினர், நேற்று அண்ணன் வீட்டுக்கு சென்று, விமான கட்டணம், மற்றும் வழிச் செலவுக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொண்டு, சத்தியப் பிரியா மற்றும் அவர் சகோதரரை கைது செய்ய சென்னை கிளம்பியுள்ளனர். கல்யாணம் ஆன அன்னைக்கு பாக்க வேண்டிய வேலையை விட்டுட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி சுத்திக்கிட்டு இருந்தா புது அண்ணி திட்ட மாட்டாங்க ? புது அண்ணி ரொம்ப வயலன்டான ஆளு. பி கேர்புல்.

தினகரன் :டெல்லி: சசிகலா புஷ்பா கணவர் ராமசாமியின் இரண்டாவது மனைவி சத்யப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமசாமி மற்றும் அவரது மகள் அஞ்சலி ஆகியோரின் புகாரின் பேரில் டெல்லி போலீஸ் வழக்கப்பதிவு செய்துள்ளது. தனது முதல் மனைவியின் மகளான அஞ்சலியை சத்யப்பிரியா கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாருக்கு தற்போது டெல்லி போலீஸ் வழக்கப்பதிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: