திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஒரு விளம்பர மாடலிடம் ஆட்சியை கொடுத்து விழிபிதுங்கி நிற்கிறது இந்தியா.

அட்டைக்கத்தி மோடி..
அன்று, இலங்கை திரிகோணமலையில் அமெரிக்கா ஆயுதகளம் அமைத்தபோது இந்தியாவை மீறி இலங்கையில் எது நடந்தாலும் அதை இந்தியாவுக்கு எதிரான செயலாகவே இந்தியா கருதும் என்றார் இந்திரா காந்தி..திட்டத்தை போட்டுவிட்டு ஓடியது அமெரிக்கா..
இன்று, இலங்கையை வாங்கி விட்டது சீனா. 56 இஞ்ச் வாய்
சவடால் புலி செத்துக்கிடக்கிறது....

நேற்றுவரை இந்தியாவை தாண்டி யோசிக்காத ரஷ்யா.. இன்று பாகிஸ்தானோடு ஒப்பந்தம் போடுகிறது...
வெறும் அருணாச்சல் பிரதேசத்தில் மட்டும் அவ்வபோது ஊடுருவி பிரச்சனை செய்த சீனா, இப்போ, சிக்கிம், உத்ராகன்ட் என ஊடுருவலை விரிவுபடுத்தியுள்ளது.. இந்தியாவோ வாய்பொத்தி உள்ளது, இந்நேரம் பாகிஸ்தான் என்றால், தேச பக்தி சும்மா குபீர்ன்னு பீறிட்டு கிளம்பியிருக்கும்.... ஆனா, சீனாவா போச்சே.. தேச பக்திய ஓரங்கட்டிட்டாங்க...
நேப்பாளம், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் என எல்லா அண்டை நாடுகளையும் சீனா கைக்குள் கொண்டுவந்துவிட்டது..
ஆக..வெளியுறவுகொள்கைகளில் படுதோல்வி.
ஊடக விளம்பரங்களை நம்பி இந்திய பாராளுமன்றத்தை ஒரு பயங்கரவாத கும்பலிடம் ஒப்படைத்ததன் விளைவு, நெருப்பு வட்டத்திற்குள் பஞ்சு மூட்டையாக இந்தியா..

நம்மை சுற்றி எந்த நட்பு நாடுகளும் தற்போது இல்லை.. தூரத்திலும் ஒரேயொரு இரட்டை நாக்கு கபட ஆயுத வியாபாரி அமெரிக்கா மட்டும்.
ஒரேயொரு ஆபரேசனை நடத்தி இறந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் எண்ணிகையை சொன்னார்கள்.. ஆனா
இன்று வரை மடிந்துகொண்டிருக்கிற இந்திய ராணுவவீரர்கள் எண்ணிக்கையை சொல்லவே கூச்சப்படுகிறார்கள்..
மோடி வந்தால் காஷ்மீரில் இருந்து 370 ஐ உருவுவார் என்றார்கள். காஷ்மீரே இந்தியாவில் இருந்து உருவப்படலாம் என்கிற நிலையில் வந்து நிற்கிறது.
கடைசியாக மோடி, அமித்ஷா, மோகன் பகவத், ஒ.பன்னீர்செல்வம் போன்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.. இந்தியாவின் பாதுகாப்போ அதல பாதாளத்தில்.
ஒரு விளம்பர மாடலிடம் ஆட்சியை கொடுத்து விழிபிதுங்கி நிற்கிறது இந்தியா.
With Sathyam Satheesh

கருத்துகள் இல்லை: