
இலங்கையில் முழுக்க முழுக்க மாணிக்க கல் என்ற சொல்லே பாவிக்கப்படுகிறது ..
உதாரணமாக இந்த ஒரு செய்தியை பாப்போம் : நாடளாவிய ரீதியில்
சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்க கல் அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்காக விசேட பொலிஸ் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை விடுத்துள்ளார்.
புவியியல் ஆராய்ச்சி மற்றும் மாணிக்க அகழ்வு பணியகத்தின் நிலைமை தொடர்பிலான விசேட கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பிலுள்ள புவியியல் ஆராய்ச்சி மற்றும் மாணிக்க அகழ்வு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது சமுத்திர உள்ளிட்ட அனைத்து வளங்களை பாதுகாப்பதற்கான விசேட நிறுவனமொன்றை நிறுவுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்படுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்போது சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்க கல் அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்காக விசேட பொலிஸ் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பூஜித்த ஜயசுந்தரவிற்கு உத்தரவிட்டார். வீரகேசரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக