ஞாயிறு, 6 நவம்பர், 2016

கௌதமியை தொடர்ந்து நடிகை சீதா... பிரிந்து வாழ்வதே சுகம்.

கடந்த சில தினங்களுக்கு முன்ன நடிகை கௌதமி நடிகர் கமலை பிரிவதாக அறிவித்தார். இது முக்கிய செய்தியாக இடம்பெற்று சமூக வலை தளங்காளில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.கணவரை விவாகரத்து செய்த நடிகை கௌதமி பின்னர் நடிகர் கமலுடன் லிவிங் டூ கெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் மகளின் எதிர்காலம் கருதி கமலை விட்டு பிரிவதாக கூறினார்.இந்நிலையில் மற்றொரு நடிகையான சீதாவும் தன்னுடைய லிவிங் டூ கெதர் வாழ்க்கைக்கு டாட்டா காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை சீதா இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று டிவி நடிகர் சதீஷ் உடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் நடிகை சீதாவிடம் சதீஷ் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை தனது வீட்டில் இருந்து நேற்று முந்தினம் வெளியேற்றிய சீதா தங்களுடைய லிவிங் டூ கெதர் வாழ்க்கைக்கு பை பை சொன்னதாக கூறப்படுகிறது. webdunia.com

கருத்துகள் இல்லை: