புதன், 14 செப்டம்பர், 2016

பாரதிராஜா : தமிழன் தமிழ்நாட்டிலேயே சிறுபான்மையாக இருக்கிறானோ.... ?

தமிழகம் இன்று வரை வந்தாரை வாழவைக்கும் தமிழகமாகத்தான்
இருந்துவருகிறது. நிலைமை மோசமடைவதற்கு முன்பு மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடைமையை சரிசெய்து அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்;இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நதிநீர் பங்கிட்டு பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் திர்ப்புக்கு எதிராக, தமிழர்கள் மீதும், தமிழர்களின் உடைமைகள் மீதும் கொலவெறி தாக்குதல் நடத்தியும், வாகனங்களுக்கு தீ வைத்தும், கர்நாடக அரசுடன் அரசியல் கட்சிகளும், கைகோர்த்துக் கொண்டு எங்கள் மக்கள் மீதும் இனவெறியுடன் தாக்குதல் நடத்துகின்ற கர்நாடக அமைப்புகளின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.


ஒரு வாரமாக தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையிலும் நேற்று பெங்களூரில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயல்பாடு கொஞ்சம் வேதனைக்குறியது. இதற்கு மேலும் தாக்குதல் நடத்தா வண்ணமும்... காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

தமிழகம் இன்று வரை வந்தாரை வாழவைக்கும் தமிழகமாகத்தான் இருந்துவருகிறது. துண்டு துண்டாக கிடந்த தேசத்தை இணைத்து ஒரு தலைவன். இணைந்த தேசத்தை சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவன் ஒரு தலைவன். வாங்கிய சுதந்திரத்தை வளமாக்குகிறோம் என்று வரிந்துகட்டி நிற்கும் இந்த நாட்டின் பல் நூறு தலைவர்களை தயவு செய்து இந்த பிரச்சனையில் ஒரு நல்ல தீர்வு காணவேண்டும். இது உங்கள் கையில் இருக்கிறது.
தமிழன் தமிழ்நாட்டிலேயே மைனாரிட்டியக இருக்கிறானோ என்ற சந்தேகம் எழுகிறது. கர்நாடகாவில் வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் தலையாய கடைமையாகும் என்பதை உணர வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர் குழைந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், இத்தகைய பெரும் கலவரங்களும், பஸ் எரிப்பும் இன துவேசத்தையும்தான் வளர்க்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அங்கே வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை எங்கள் உணர்வுகளை அடக்கிக்கொண்டு பவ்வியமாக கேட்டுக்கொள்கிறோம்

இந்திய தேசத்தின் விடுதலைக்காக மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் படையில் நின்று போரிடுவதற்காக.. பர்மா வாழ் தமிழர்களும்.. தமிழ்நாட்டு வாழ் தமிழர்களும் பல லட்சம் பேர் திரண்டு நின்று போரிட்டு இருக்கிறார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்கள் மறுக்க முடியாது.

சமீபத்தில் இன அழிப்பில், ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை இழந்து சொல்லமுடியாத அளவுக்கு துயரத்தில் இருந்த சூழலில், மரம் வெட்ட வந்தவர்களை தண்டிக்கிறோம் என்ற பெயரில் ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றார்கள்.
முல்லைப் பெரியாறு, பரப்பிக்குளம் அணைப் பிரச்சனையில் எங்கள் தமிழர்களை தாக்குவதும், தற்போது காவிரி நதிநீர் பிரச்சனையில் எங்களது தமிழர்களிம் கோடிக்கணக்கான உடைமைகளை சிதைத்தும், தமிழர்களை அடிப்பதும் என்பது நாங்கள் இந்த தேசத்தில் இருக்கிறோமோ என்ற கேள்வி எழுகிறது.

;இந்திய அரசு இதுவரை இந்த பிரச்சனையில் தலையிடாதது பெருத்த வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இனங்களும், தங்களை தாங்கள் ஆண்டது போல்.. நாங்களே ஏன் எங்களை ஆண்டுகொள்ளக்கூடாது என்கின்ற கேள்வியை எங்களது இளைஞர்கள் மனதில் நீங்களே விதைத்துவிடாதீர்கள், என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
;நிலைமை மோசமடைவதற்கு முன்பு மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடைமையை சரிசெய்து அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: