சனி, 7 மே, 2016

தமிழக செல்போன் செக்ஸ் பேச்சு: இனிமை வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்

sex may 7
அன்புள்ள கதலிக்கு’ என்று கால் போடாமல் காதல் கடிதமெழுதி அனுப்பிய காலமெல்லாம் மலையேறிப் போய் இப்பொழுது செல்போன் செக்ஸ் வந்துவிட்டது, (செல்)போன் செக்ஸ் என்றால் என்ன? காம உணர்ச்சியை தூண்டும் விஷயங்களை அப்பட்டமாக போனில் பேசுவதே அல்லது கேட்பதே போன் செக்ஸ்.* இந்தப் பழக்கமுடையவர்கள் தங்களுடைய காம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக பெரும்பாலும் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். திருமண நோக்கோடு காதலிக்கும் ஜோடிகளுக்கிடையே பரிமாறப்படும் அசிங்கமான பேச்சாக இருந்தாலும் சரி அந்நியர்களுக்கிடையே பரிமாறப்படும் அசிங்கமான பேச்சாக இருந்தாலும்சரி, போன் செக்ஸ் பாப்புலராக இருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. சொல்லப்போனால், தற்போது பலர் இதை வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்கள்.

செக்ஸ் – இந்த மூன்றெழுத்து உணர்வுள்ள ஒரு விஷயம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.இதற்கு ஒத்துக் கொள்ள முரண்டு பிடிப்பவர்கள் ஏதேனும் ஒரு தினசரியைப் புரட்டிப் பார்த்தாலே போதுமானது. டீன் ஏஜ் பெண்களின் காதல் முதல் முக்கால் கிழடுகளின் கள்ளக் காதல் வரை எல்லாமே சொல்லித் தரும் பாடம் செக்ஸ் பற்றியதாகவே இருக்கிறது. இந்த பட்டியலில் சமீபகாலமாக திடுக்கிட வைக்கும் முன்னேற்றம்தான் செல்போன் செக்ஸ் உரையாடல் !
அது சரி போன் செக்ஸ்-ன்னா ? -என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் கண்ணியமாய்ச் சொல்ல வேண்டுமெனில் தொலைபேசியில் பேசிக் கொள்ளும் இருவர் பாலியல் ரீதியான உரையாடல்களில் லயித்து, உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்வது எனலாம். மின்னஞ்சலில் பேசிக் கொள்வது, இண்டர்நெட் சேட் விண்டோக்களில் பேசிக்கொள்வது போல ஒரு முகம் தெரியா செக்ஸ் தூண்டுதல் தான் இது.
நள்ளிரவு தாண்டிய பின்னும் தனியாக அமர்ந்து, வெட்கத்தின் நகத்தைக் கடித்துத் தின்றபடி, போனில் பேசிக்கொண்டிருக்கும் பெண்களும், ஆண்களும் பெரும்பாலும் இந்த ஏரியாவில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். திருமணமாகி தனியே வாழும் தம்பதியரும் இத்தகைய தொலைபேசி உரையாடல்களில் லயிப்பதுண்டு. இவை எப்போது எல்லை மீறுகிறது தெரியுமா ? அறிமுகமற்ற நபர்களை தொலைபேசி செக்ஸ் பேச்சுகளுக்காக நாடும்போது தான்.
இந்தியாவில் – குறிப்பாக நம் தமிழகத்தில் இது கொஞ்சம் அதிர்ச்சிகரமான அறிமுகமாக இருந்தாலும் வெளிநாடுகளைப் பொறுத்தவரை இது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான பிஸினஸ். பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற சட்டபூர்வமான தொழில். ஒருவகையில் இது ஒரு விபச்சாரத் தொழில் போலத் தான். ஆனால் என்ன இங்கே இரு நபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவோ, உண்மையான தொடுதல் உணர்வுகளைப் பெறவோ முடியாது அவ்வளவு தான். இருவரும் கற்பனையான உலகுக்குள் சுற்றித் திரிவார்கள்.
நல்ல வசீகரிக்கும் குரல் மட்டும் தான் இந்தத் தொழிலில் ஈர்க்கப்படும் அம்சம். அப்படிப்பட்டவர்களைத் தான் தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றனர். அழைக்கப்பட்டவர்களை பேச்சில் குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களுக்கான பணி. “உங்களுக்காக இதோ நாங்கள் காத்திருக்கிறோம் தனிமையை இனிமையாக்க கால் பண்ணுங்கள்” என விளம்பரம் வரும். அதில் வரும் எண்ணுக்குப் போன் செய்தால் பெண்கள் பேசுவார்கள். இவர்களெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள். காதலில் கசிந்துருகுவது போலவும், காமத்தின் கால்வாயில் நீந்துவது போலவும் பேசுவதில் எக்ஸ்பர்ட்.
மேலை நாடுகளில் இவற்றுக்கென தனி எண்கள் வைத்து நிமிடக் கணக்கில் டாலர்களைக் கறக்கிறார்கள். பெரும்பாலும் டெலிபோன் பில்லுடன் அந்தக் கட்டணமும் வரும். தொலை பேசி நிறுவனங்கள் அந்தத் தொகையில் கணிசமான ஒரு தொகையை இந்த பாலியல் பேச்சு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும். இதன் மூலம் ஒரு பெண் ஒரு வாரத்துக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்கள் வரை சம்பாதித்து விட முடியும் என்கிறது புள்ளி விவரம்.
“உங்களுடைய இரவை இனிமையாக்க வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள் லிஸா காத்திருக்கிறார்” என மேற்கத்திய உலகம் விற்றுக்கொண்டிருந்ததை தமிழ்ப்படுத்தியிருப்பது தான் கொடுமை. “உங்களில் யாருக்காவது ஸ்பைஸி சேட் வேணுமா மாலதியும், கல்பனாவும் உங்களுக்காக காத்திருக்காங்க. கால் பண்ணுங்க” என்பது போன்ற ஏதேனும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தால் அப்படியே டிலீட் பண்ணிவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுங்கள். அத்தகைய அழைப்புகளெல்லாம், விவகார அழைப்புகள் தான்.
அதிலும் முகம் தெரியாத பெண்களுக்கு போன் செய்து பேசி, அதன் மூலம் தனது செக்ஸ் ஆர்வத்தை பூர்த்தி செய்து கொள்ளும் ஆண்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறார்களாம். இவர்களை Phone Sex Abusers என அழைக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 13 லட்சம் பேர் போனை தவறான விஷயங்களுக்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு சர்வே. பொதுவாக நம்மூர் ஆண்கள்தான் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். பெண்கள்தான் இந்தப் பிரச்னையில் அதிகமாக பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.
அதாவது ஒரு வகை கிக், திரில்லுக்காக இம்மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அதிகம். வெறுமனே பெண்களின் குரலைக் கேட்பதன் மூலம் செக்ஸ் உணர்ச்சிகளை அடைபவர்களும் இருக்கிறார்கள். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே சுய இன்பத்தில் ஈடுபடுபவர்களும் உண்டு. சிலர் ‘உன்னை விரைவில் மீட் பண்ணுவேன்’ என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், நேரில் வர மாட்டார்கள். சிலர் மார்பு, உதடு போன்ற அங்கங்களை வர்ணித்து பேசுவார்கள்.
ரேப் செய்யப்போவதாகக் கூட மிரட்டுவார்கள். பெண்களிடம் தனது அந்தரங்க உறுப்புகளை காட்டுவதில் கிடைக்கும் சந்தோஷம் இவர்களுக்கு இப்படி போன் கால் செய்வதில் கிடைக்கிறதாம். இதனால் இவர்கள் ஒருவித கிளர்ச்சி மனநிலையை அடைகிறார்கள். தங்களுக்கு ஓர் அதிகாரம் இருப்பதாக செயற்கையாக நினைக்கிறார்கள். இவர்கள் Coward எனப்படும் கோமாளி வகையைச் சேர்ந்தவர்கள். நேரில் பேச தைரியம் இல்லாமல்தான் போனில் பேசிக்கொண்டு அலைகிறார்கள். இவர்களை கண்டு பயப்படாமல் எதிர் கொண்டாலே ஓடிவிடுவார்கள்.
இப்படி ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசுவதை Symbolic Rape எனவும் அழைப்பார்கள். தொண்டு நிறுவனங்களில் தகவல்கள் சொல்வதற்காக வேலை செய்யும், டெலிபோன் ஹெல்ப்லைனில் வேலை பார்க்கும் பெண்கள்தான் இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பிடிக்காத பெண்களை டார்ச்சர் செய்யக்கூட இப்படி போனில் பேசுபவர்களும் உண்டு. அந்நியர் போன் செய்தால், தொடர்ந்து அவர்களிடம் பேசக்கூடாது.
வெளிநாட்டிலுள்ள ஆபாசப் பேச்சு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல இடங்களிலும் கமுக்கமாய் நடந்து வருகிறது. ஆபாசப் பேச்சை விரும்புபவர்கள் “ஆசியப் பெண்களிடம், அல்லது இந்தியப் பெண்களிடம்” பேச வேண்டுமென ஸ்பெஷலாய் விரும்பினால் அந்த அழைப்புகளை இங்குள்ள கிளைகளுக்கு அனுப்பி விடுகிறார்களாம். சில நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள அழைப்புகளை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன.
மொத்தத்தில் எண்பதுகளில் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. இந்த சந்தை இன்னும் அதிகமாக விரிவடைந்திருக்கிறது. இந்தியாவை இணைத்தும் ஒரு சர்வதேச வலையமைப்பில் இப்போது இந்த ஆபாசப் பேச்சு தொழில் விரிவடைந்திருப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும்.ஆபாசப் பேச்சுகள் குடும்ப உறவுகளின் மீதான பிடிப்பைப் போக்கி ஒரு விதமான மயக்க கற்பனை உலகிற்குள் மக்களை சிறைப்படுத்தி விடுகிறது. மேலை நாடுகளில் இத்தகைய ஆபாச அழைப்புகளுக்கான வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் பார்வையிழந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. அப்படிப் பார்த்தாலும் 70 சதவீதம் பேர் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுடைய குடும்ப வாழ்க்கை பலவீனமடைய இது மிக முக்கியக் காரணமாகி விடுகிறது.
ஒருவகையான அடிக்ஷனாகவும் இது மாறிவிடும் என்கின்றனர் உளவியலார்கள். இந்தப் புதை குழிக்குள் விழுபவர்கள் பின்னர் சாதாரண தாம்பத்யத்தில் விருப்பம் இழந்து, போனில் பேசினால் தான் தாம்பத்ய உறவு எனும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.இந்தியாவைப் பொறுத்தவரை இது சட்ட விரோதமானது. ஒரு வகையில் விபச்சாரத்துக்கான கடுமையுடன் இதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பதின் வயதுப் பசங்களும், பெண்களும் இத்தகைய வலைகளில் சிக்கிக் கொண்டால் அவர்களுடைய எதிர்காலமே ஒட்டு மொத்தமாய் அழிந்து போகும் அபாயமும் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டாக்டர்.செந்தில் வசந்த்  www.aanthaireporter.com/

கருத்துகள் இல்லை: