புதன், 4 மே, 2016

உம்மன் சாண்டி: தலித் மாணவி படு கொலை கேரளாவுக்கு அவமானம்.. கடும் நடவடிக்கை எடுப்போம்.

திருவனந்தபுரம்: சட்ட கல்லூரி தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரள மாநிலத்துக்கே அவமானம் என்று முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்து உள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்து பெரும்பாவூரில், சட்டக்கல்லூரி தலித் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், மாணவி கொலை குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குபடி மாநில அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளன.


இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின் முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்து உள்ளோம். மாணவியின் சகோதரிக்கு வேலை வழங்குவோம் .விகடன்.com

கருத்துகள் இல்லை: