புதன், 6 ஆகஸ்ட், 2014

கோவிந்தாச்சாரியா : Facebook twitter சமூக தளங்களை மோடி அரசு பயன்படுத்துவது சட்டவிரோதம்!

சமூக வலைத்தளங்களை மோடி அரசு பயன்படுத்துவது சட்டவிரோதம்: பாஜக முன்னாள் மூத்த தலைவர் வழக்கு சமூக வலைதளங்களை மோடி அரசு பயன்படுத்துவது என்பது நாட்டின் பொது ஆவணங்கள் சட்டத்தை மீறிய செயல் என்று  பாஜக முன்னாள் மூத்த தலைவர் கே.என். கோவிந்தாச்சார்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணையின்போது, கோவிந்தாச்சார்யாவை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கோவிந்தாச்சார்யாவின் வழக்குரைஞர் விராக் குப்தா, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பிரமாணப் பத்திரம்தாக்கல் செய்தார்.
அதில், மோடி அரசில் 19 அமைச்சகங்கள் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளன. 5 அமைச்சகங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளன. பிரதமர் அலுவலகமும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளது. மத்திய அரசின் முறையான அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஆவணத்தையும் இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்கிறது பொது ஆவண சட்டம். இதனால் அரசாங்கம் இ மெயில்களைப் பயன்படுத்துவது கூட சட்டப்படி தவறு. மேலும் இந்த  சமூக வலைதளங்கள், இ மெயில்களின் சர்வர்கள் அனைத்தும் வெளிநாட்டில்தான் இருக்கின்றன. அப்படியான நிலையில் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எப்படி மற்ற நாடுகளுக்கு பரிமாறிக் கொள்ள முடியும்?
என்று குறிப்பிட்டிருந்தார்.இதனிடையே மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், தேசிய இ மெயில் கொள்கை ஒன்றை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 15-ந் தேதி அனைத்து துறை செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தயார் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: