வியாழன், 7 ஆகஸ்ட், 2014

கண்ணாடி பொம்மைகள் ! லைட் மேன்களின் கதையை சொல்லும் ஆவணப்படம் !

மனிதர்கள் சமூகத்தில் எங்கெல்லாம் நசுக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களைப் பற்றிய ஒரு திரைப்படம் எங்காவது வெளிவரும். ஆனால் சினிமா தோன்றிய நாள் முதலிலிருந்து இன்றுவரை அற்ப சம்பளத்திற்கு அதிக உழைப்பை கொடுத்து வேலை செய்யும் திரையுலக லைட்மேன்களின் வாழ்க்கை சொல்லப்படாததாகவே இருந்துவருகிறது.கோடிகளில் பணம் புழங்கும் துறைகளில் சினிமா துறையும் ஒன்று. ஆனால் சினிமாவின் முக்கியமான் தூண்களில் ஒன்றாக இருக்கும் லைட்மேன்களோ ஆயிரங்களில் வாங்கும் தங்கள் சம்பளத்திற்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களது வாழ்க்கை முறை இன்றும் வெளிச்சமின்றியே காணப்படுகிறது.
இத்தகைய லைட்மேன்களின் வாழ்க்கையைப் பற்றி விளக்கமாக விவாதிக்கிறது ‘கண்ணாடி பொம்மைகள்’ ஆவணப்படம். பல சர்வதேச விருதுகளைப் பெற்ற இயக்குனர் வெங்கடேஷ் குமார் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். அவரது 10 குறும்படங்களும் சமூகத்தின் சோகக் கதையை திரையில் வெளிச்சம் போட்டு காட்டிய படங்கள். கிட்டத்தட்ட 70 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படம் லைட்மேன்கள் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்த ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்  nakkheeran.in

கருத்துகள் இல்லை: