ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

காதல்கதைகளுக்கு தாவிய இயக்குனர் சேகரின் சரவணா பொய்கை !

குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர்.>அவரது மகன் கார்ல் மார்க்ஸ் நடிப்பில் உருவாகிவரும்  சரவண பொய்கை பற்றி பேசிய வி.சேகர் “நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம். குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம். எதிர்கால சிந்தனை கூட கும்பதிற்காக மட்டுமே. ஓவொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என் படங்களை வெற்றி பெற செய்தார்கள். இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதைதான் ’சரவண பொய்கை’.
இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் விதமாக எடுத்திருக்கிறோம். இதுவரை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக நான் இயக்கிய 17 படங்களுக்குமே “U “ சர்டிபிகேட் படங்கள் தான். சரவண பொய்கை படத்திற்கு ஒரு கட் கூட இல்லாமல் சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. கார்ல்மார்க்ஸ், அருந்ததி, விவேக், கருணாஸ், கோவைசரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் காதல், காமெடி படமாக உருவாகி உள்ளது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது” என்றார் வி.சேகர். nakkheeran.in

கருத்துகள் இல்லை: