
நேற்று காலை, 8 மணிக்கு, தனது தாத்தா முத்துகாளையுடன், சிறுமி முத்துலட்சுமி, தோட்டத்துக்கு முருங்கைக்காய் பறிக்கச் சென்றார். எதிர்பாராத விதமாக, போர்வெல்லுக்காக தோண்டப்பட்ட குழியில், சிறுமி முத்துலட்சுமி தவறி விழுந்தார். அரவக்குறிச்சி தீயணைப்பு படை அதிகாரி கோமதி தலைமையில், வீரர்கள் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிறுமி முத்துலட்சுமிக்கு, டியூப் வழியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.
சிறுமியை மீட்க, மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம், பக்கவாட்டில் குழி தோண்டும் பணி விறுவிறுப்பாக நடந்தது. பாறையாக இருந்ததால் இப்பணி பாதிக்கப்பட்டது. பாறைகள் உடைக்கும் இயந்திரமும் வரவழைக்கப்பட்டு பணி நடந்தது. ஆயினும், மாலை, 6 மணிவரை, சிறுமி முத்துலட்சுமி மீட்கப்படவில்லை. பெற்றோரும், மற்றவர்களும், மேலேயிருந்து முத்துலட்சுமி என்று குரல் கொடுத்தபடியே இருந்தனர். மதியம், ஒரு மணி வரை குழந்தை முத்துலட்சுமி அழும் சத்தம் கேட்டதாக, அங்கிருந்தவர்கள் கூறினர். பின்னர், சத்தம் எதுவும் கேட்கவில்லை.
கரூர் மாவட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணியை முடுக்கி விட்டனர். இந்நிலையில், 15 மணி நேர போராட்டத்துக்கு பின், இரவு, 10.50 மணியளவில், சிறுமி மீட்கப்பட்டார். மயக்கமடைந்த நிலையில் இருந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம், கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு செயற்கை சுவாசும் அளித்தும் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. சிறுமி இறந்து விட்டதாக நேற்று நள்ளிரவு டாக்டர்கள் அறிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். dinamalar,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக