ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

திருமாவளவன் விஜயகாந்த் திடீர் சந்திப்பு ! மரக்காணம் கலவரம் பற்றிய பேச்சாம் ? நம்புறோம்

தருமபுரி கலவரத்தைத் தொடர்ந்து மரக்காணத்திலும் தலித்
குடியிருப்புகளைத் தீயிட்டுக் கொளுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க.வின் தொடர்ச்சியான தலித் விரோத மற்றும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் போக்கை அம்பலப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.28-4-2013 காலை 11 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை நிலையத்தில் சந்தித்தார்.விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், இரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், தேமுதிக பொதுச்செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதீசு மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்

கருத்துகள் இல்லை: