புதன், 29 ஜூன், 2011

கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழிக்கு காளகஸ்தி கோவிலில் ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை செய்தார் செல்வி

கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு காளகஸ்தி கோவிலில் ராகு-கேது தோஷ சர்ப்ப

நிவாரண பூஜை நடத்த கலைஞர் மூத்த மகள் செல்வி முடிவு செய்தார். இதன்படி அவர் தனது
குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். 
a

முதலில்  திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு வி.ஐ.பி. வரிசையில் சென்று ஏழுமலையானை
பயபக்தியுடன் தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.


அங்கு சென்றதும் செல்வி உள்ளிட்ட அவருடன் சென்றவர்கள் மிருத்யுஞ்ஜெயலிங்கம் முன்பு அமர்ந்தனர்.

கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயர்களில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை

இந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும் அவர்கள் கோவிலுக்குள் சென்று கருவறையில் உள்ள வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து  சாமி கும்பிட்டனர்.

அதன்பிறகு அவர்கள் மிருத்யுஞ்ஜெயலியங்கம் அருகே சென்று வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.

காளகஸ்தி கோவிலில் கலைஞர்-கனிமொழி பெயர்களில் அவர்களது குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அடடா இவர்கள் எல்லாம் இன்னும் எதோ பெரியாரின்  பகுத்தறிவு வழிகாட்டிகள் என்றல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறோம்?
சுயமரியாதை என்றால் என்னவென்று மறந்தே போய்விட்டதா?
என்ன செய்வது தற்போது உங்களுக்கு சோதனைக்காலம் எனவேதான் மேலும் உங்களை விமர்சிக்காமல் உள்ளோம். 
உங்களுக்கு ஒரு ஆலோசனை, என்னதான் நீங்கள் பார்பனர்களை திருப்தி படுத்தினாலும் அவர்கள் உங்களை ஒரு போதும் விட்டுவைக்க மாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் என்றும் எதிரிதான்.

கருத்துகள் இல்லை: