புதன், 27 அக்டோபர், 2010

Chandrikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குற்றவாளிக்கு சிறை

1999ம் ஆண்டு கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக இனங்காணப்பட்ட சக்திவேல் இளங்கேஷ்வரனுக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றவேளையில் பிரதிவாதி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டநிலையில் பிரதிவாதியான சக்திவேல் இளங்கேஷ்வரனுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதுன் 80 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: