சனி, 30 அக்டோபர், 2010

யாழ். கஸ்தூரியார் வீதி சிறீ ஹயூரன் நகை மாடத்தில் திருட முயற்சித்த இருவரில் ஒருவர் சிக்கினார்..!

யாழ்ப்பாணத்தின் நகரப்பகுதியில் கஸ்தூரியார் வீதியில் உள்ள சிறீ ஹயூரன் நகை மாடத்தில் பகல் 11.30 மணியளவில் இருவர் திருட முயற்சித்துள்ளனர். இதை அவதானித்த நகைக்கடை உரிமையாளர் அங்கு இருந்த இளைஞர்களின் உதவியுடன் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல ஒருவர் பிடிபட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆனால் பொலிசாரின் நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கன்றனர்.

கருத்துகள் இல்லை: