சனி, 30 அக்டோபர், 2010

சீனாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலத்த வரவேற்பு


ஜனாதிபதி மஹிந்த   ராஜபக்ஷ் இன்று சீனாவுக்கு இரண்டு நாள்   உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஷங்காய் விமான நிலையத்தில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. சீன மாணவா்களும் அணியாகத் திரண்டு ஜனாதிபதிக்கு வரவேற்பளித்தனர்.
ஷங்காயில் நடைபெறவுள்ள 2010 ஆம் ஆண்டுக்கான எக்ஸ்போ கண்காட்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். ஆயிரம் பார்வையாளர்கள் பங்கு பற்றும் இக் கண்காட்சியில் உலக நாடுகளின் இருபது தலைவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கருத்துகள் இல்லை: