சனி, 30 அக்டோபர், 2010

விடுதலைப்புலிகளின் ஆயுத களஞ்சியம் ஒன்று செட்டிக்குளம் பகுதியில் கண்டுபிடிப்பு

யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் அரச முக்கியஸ்தர்களின் வாகனங்களை தகர்க்க பயன்படும் காந்த குண்டுகள் உள்ளிட்ட வைக்கப்பட்டிருந்த  ஆயுத களஞ்சியம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் செட்டிக்குளம் கண்டுபிடித்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிரடிப்படையின் வவுனியா பிராந்திய கட்டளை அதிகாரி சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் கே.எச்.ஜயவீரவிற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பிரதேசத்திற்கு சென்ற அதிரடிப்படையினர், இந்த களஞ்சியத்தை கண்டுபிடித்துள்ளதுடன், அதில் இருந்த ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். 

வாகனங்களில் ஒட்டக் கூடிய காந்தங்களுடான 7 வெடிக்குண்டு பொதிகள், 130 டெட்டநேட்டார்கள், தலா இரண்டு கிலோ கிராம் எடைக்கொண்ட இரண்டு குண்டு பொதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: