சனி, 30 அக்டோபர், 2010

அவன் இவன் - பாலாவின் ப்ளான்



ஆர்யா விஷால் அண்ணன் தம்பியாக நடிக்கும் 'அவன் இவன்' படத்தை பாலா தேனியில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இது வரை மிரட்டலான படங்களை கொடுத்த பாலா முதல் முறையாக ஒரு குதூகலமான குடும்ப படத்தை எடுத்துவருகிறார்.



இது பற்றி பேசிய ஆர்யா, 'நான் கடவுள்' படத்தில் நாற்பது நாளாச்சு இன்னும் ஒரு ஷாட் கூட எடுக்கலையே என என் கூட நடிக்கிறவர்கள் கேட்பது உண்டு. ஆனால் 'அவன் இவன்' படத்தில் அப்படி இல்லை. பாலா சார் காலையில் ஏழு மணிக்கே ஸ்பாட்டுக்கு வர்றார். ஒன்பது மணிக்கெல்லாம் முதல் ஷாட். பக்கா பிளானோட இறங்கி இருக்கிறார் பாலா சார் என செம உற்சாகம் காட்டினார். 

காமெடி கலந்த இந்த படத்தில் விஷாலும் ஆர்யாவும் அரவாணியாக நடிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப் பட்டது. ஆனால் என்ன வித்யாசமான கதாபாத்திரம் என்பது இன்னும் சஸ்பென்சாகவே இருக்கிறது. ஆர்யாவும் விஷாலும் கிளீன் ஷேவோடுதான் இருக்கிறார்கள். எந்த விழாவுக்கும் வெளியே தலை காட்டாத விஷால். சமீபமாக நடந்த இயக்குனர் சங்க விழாவுக்கு வந்திருந்தார். 

அம்பிகா அம்மாவாக நடித்துவருகிறார். சூர்யா ஒரு கௌரவத் தோற்றத்தில் வருகிறார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகும் அவன் இவன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இளமை இசை வழங்கியிருக்கிறார். இது என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாலா சார் ரொம்ப சூப்பரா படத்தை கொண்டுவருகிறார் என்று தான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிவருகிறாராம் விஷால். ஏற்கெனவே ஹீரோயினாக ஜனனி ஐயர் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகை மது ஷாலினி இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறாராம்.

கருத்துகள் இல்லை: