![]() |
Rebel Ravi : திமுக தோல்விக்கு விதை போட்ட நிகழ்வு.
அரசு அரசாகச் செயல் பட வேண்டும்.
குற்றவாளி எவனாக இருந்தாலும் தூக்கி உள்ளே வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விடுத்து, எந்தத் தலைவரும் அவர் கட்சித் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் என்று மகாத்மா போல் பேசியது முதல் தவறு.
நள்ளிரவில் கரூர் போனது, செ பா போனது, அன்பில் அழுதது.. இதெல்லாம் அடுத்தடுத்த தவறுகள். தவெக நிர்வாகி பத்து பேரை உடனே கைது செய்து,
![]() |
அந்த நிகழ்வை ஒரு கட்சியின் அலட்சியப் போக்காய்க் கருதி.. கருவிலேயே அழித்திருக்க வேண்டும்.
கைது செய்தால் தேர்தல் வெற்றி பாதிக்கும் ஆட்சி போய் விடும் என் அஞ்சிய ஸ்டாலின் அவர்களே…இப்ப மட்டும் என்ன வாழுது?
பில்லக்கா பையன பெரியாளாக்கி அவனிடமே தோற்றீரே இது எவ்வளவு அசிங்கம்?
Devamathi Venkatesh
அவர் இயல்பு அது தன் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தலைவர்கள் தவறான செயல்களில் ஈடுபட்ட போது காட்டிய கரார் தனத்தை எதிரி கட்சி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்ட தற்குறி குடிகார ஜோம்பிஸ் தலைவன் விர்ச்சுவல் வாரியார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் தான் நமக்கு இந்த நிலைமை
கட்சிக்காரர்களுக்கு பவர் இல்லை என்றால் கட்சிக்கு எப்படி பவர் இருக்கும் திமுகவின் வின் தொண்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டது அதிகம் .நம் கூட்டணியில் இருந்த கட்டப் பஞ்சாயத்து கட்சிகளூக்கு இருந்த சுதந்திரம் மரியாதை அதிமுக பாஜக வுக்கு இருந்த மரியாதை கூட அரசு அலுவலகங்கள் காவல் நிலையத்தில் நம் கட்சிக்காரர்களுக்கு இல்லை. இந்த வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்
Showketh Hussain
நாகரிக அரசியல் என்று சொல்லி நம்மை நாமே கீழிறக்கிக் கொண்டோம். விஜய், ஆதவ், புஸ்ஸி மீது குறைந்த பட்சம் FIR பதிவு செய்திருக்க வேண்டும். அந்த வாகனத்தை சிறை பிடித்து அந்த CCTV footage களை கைப்பற்றி இருக்க வேண்டும்.
ஆட்சியிலிருந்து எதுவும் செய்யாமல், தவெக அன்று அரசு மீது வைத்த அவதூறு குற்றச்சாட்டு எதற்கும் பதிலளிக்காமல் இருந்தது எல்லாம் அரசு தான் தவறு செய்தது என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கி விட்டது.
நாகரிக அரசியலால் புதிய எதிரிகள் உருவானார்கள்; பழைய எதிரிகள் வலிமை அடைந்தார்கள் என்பதே உண்மை.
Rajendra Selvaraj
குறைந்த பட்சம் .....அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த புஸ்ஸி, நெட்டக்காலன் மீது FIR பதிவு செய்து Charge sheet frame பண்ணியிருக்க வேண்டும்...
கூட்டத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்த விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவனுடைய இமேஜை கிழித்திருக்க வேண்டும்...ஏர்போர்ட்டில் அவன் ஓடியதை தீவிர அரசியலாக்கி அவனுடைய அரசியலையே முடித்து வைக்க காலம் தந்த அரிய வாய்ப்பை ஸ்டாலின் தவற விட்டது மன்னிக்க முடியாத குற்றம்....
அவர் செய்த மாபெரும் தவறின் பலனை இன்று திமுக அனுபவிக்கிறது...
Abu Rayyan
இதை சொல்ல மிகுந்த வேதனையாக உள்ளது...
நாம் மிகவும் மதிக்கும் அன்றைய முதலமைச்சரை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் இவர் கையாலாத முதலமைச்சர் என்றும் இவரை விட நடிகர் விஜய் மக்கள் செல்வாக்கு மிக்கவர் என்ற மாய பிம்பத்தை உருவாக்க .... குற்றவாளிகள் மீதும் திட்டமிட்டு வதந்தி பறப்பியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்த திமுக அரசே காரணமாக இருந்தது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக