![]() |
ராதா மனோகர் : 1995 இல் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று கொண்டே இருந்தது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முடிவோடு யாழ்ப்பாணத்தை பல முனைகளிலும் முற்றுகை இட்டு நகர்ந்த ராணுவம் பல இழப்புக்களின் மத்தியில் 1995 ஆக்டொபர் மாதம் யாழ்ப்பாணத்தை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது
தென்னிலங்கையிலும் பலவிதமான பங்கரவாத செயல்கள் இடம்பெற்ற வண்ணமே இருந்தது
எளிதில் விளங்க வைக்க முடியாத அளவு மிக பயங்கரமான சூழல் எங்கும் நிலவியது.
சந்திரிகா அம்மையாரின் நிலைமையும் படுமோசமாக இருந்தது
ஆளும் கட்சியிலும் பலர் அதிருப்தியோடு இருந்தார்கள்
நாட்டின் நிச்சயமற்ற தன்மையும் பாதுகாப்பு தளம்பல்களும் சேர்ந்து பல அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆட்டி படைத்தன.
யாழ்மாவட்டம் அரச கட்டுப்பாட்டில் பூரணமாக வந்துவிட்டது
புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்களில் பெருந்தொகையானோர் திரும்பி வந்து விட்டனர்
பெரிய ராணுவ கெடுபிடிகள் இன்றி அவர்கள் யாழ் குடாநாட்டுக்குள் அனுமதிக்க பட்டார்கள்
யாழ் குடாநாடு ஒரு இறுக்கமான பாதுகாப்பு வளையத்திற்குள் நிர்வகிக்க பட்டது
பள்ளிக்கூடங்கள் ஒழுங்காக ராணுவ பாதுகாப்புடன் இயங்கின
பள்ளிக்கூட பேருந்துகள் உட்பட எல்லா பேருந்துகளும் ராணுவ பாதுகாப்புடன் இயங்கின
எல்லா சந்திகளிலும் ராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டு மக்களின் நடமாட்டங்கள் கவனமாக கண்காணிக்க பட்டன
புலிகள் என்ன காரணம் கொண்டும் மீண்டும் யாழ்பாண குடாநாட்டுக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் ராணுவம் கவனமாக இருந்தது
இதன் காரணமாகவே பல சட்டமீறல்களும் நடந்தன
குறிப்பாக புலிகளோடு தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் பலரும் கைதாகும் சம்பவங்களும் நடந்தன.
அதன் காரணமாக காணாமல் போதலும் நடந்தன.
குறிப்பாக செம்மணி என்ற மயானத்தில் கிருஷாந்தி என்ற மாணவியும் அவரது குடும்பமும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சமயம் பெரிய அதிர்வலைகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருந்தது
சந்திரிகா அம்மையார் அந்த குற்ற செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரை இனம் கண்டு கைது செய்தது
பின்பு அவர்களுக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது
சட்டம் ஒழுங்கு விடயத்தில் சந்திரிகா அம்மையார் கவனமாகதான் இருந்தார்
ஆனாலும் ராணுவத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த கூடிய நிலையிலும் அவர் இருக்கவில்லை.
ஏனெனில் உக்கிரமான போர் சூழலில் ராணுவத்தினரை கட்டுப்படுத்துவது எந்த ஆட்சியாளருக்கும் இலகுவானதல்ல.
மறுபுறத்தில் புலிகள் எப்போதும் தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து யாழ் குடாநாட்டுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதில் குறியாக இருந்தார்கள்
இந்த காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்புவதில் மிகுந்த சிரத்தை காட்டினார் சந்திரிகா அம்மையார்.
குறிப்பாக பல பள்ளிக்கூடங்களுக்கு புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டன
யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கும் யாழ் மருத்துவ மனைக்கும் பல புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டன
யாழ் பல்கலை கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு புதியபெரிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் பல தொழில்கள் முடங்கி இருந்தன
எனவே அன்றாட வாழ்வுக்கு உரிய உணவு பொருட்கள் நிவாரணமாக தொடர்ந்து வழங்கப்பட்டன .
ராணுவம் நிரந்தரமாக நிலை கொண்டிருந்ததனால் பலருக்கும் அது மிகவும் பழகிப்போன விடயமாக காணப்பட்டது
மக்கள் ராணுவத்தை கண்டு பயப்படும் நிலை நீங்கி இருந்தது
அந்த காலக்கட்டத்தில் நான் அங்கு இருந்தேன் எனவேதான் அங்கு அன்று நிலவிய சூழிநிலை பற்றி என்னால் உறுதியாக கூறமுடிகிறது
மக்கள் ராணுவத்தோடு இணங்கி வாழும் ஒரு சூழ்நிலை என்பது புலிகளுக்கு உண்மையில் ஏற்புடையதாக இருக்கவில்லை
மக்கள் இந்த சூழலை ஏற்று கொண்டுவிட்டால் எந்த காலத்திலும் போருக்கு தயாராக மாட்டார்கள் அதுமட்டுமல்ல இனி எந்த காலத்திலும் தங்கள் பின்னால் மக்கள் வரமாட்டார்கள் என்றும் புலிகள் கருதினார்கள்
அப்படி அவர்கள் கருதுவதற்கு ஒரு வலுவான காரணமும் இருந்தது
பள்ளிக்கூடத்திற்கு செல்லும் சின்னஞ்சிறு பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் பேருந்துகளில் பாதுகாப்பாக வீடு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை பெற்றோருக்கு இருந்தது
இதன் காரணமாக யாழ்ப்பாண மக்களின் மனங்களை இலங்கை ராணுவத்தினர் வென்று விட்டார்கள் என்ற நிலை தோன்றியது
இதை உலகநாடுகளும் உன்னிப்பாக கவனித்து உணர்ந்து கொண்டது
உலகில் எந்த பெற்றோருக்கும் பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக வீடு வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கையை யார் கொடுக்கிறார்களோ அதுதான் பெரிது,
அவர்கள் பக்கம்தான் நிற்பார்கள்
அவர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
எந்த பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்குத்தான் முதல் இடம்
மறுபுறத்தில் புலிகள் பிள்ளைகளை பிடிக்கும் வேலையை அல்லவா பார்த்தார்கள்?
இந்த உண்மையை மறைத்து நீண்ட காலமாக பலர் பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டார்கள்
ஆனால் காலம் உண்மையை பேசியது
அது மட்டுமல்ல இனி எந்த காலத்திலும் இந்த மக்கள் புலிகளின் மீள்வரவை ஆதரிக்க போவதில்லை என்பதுவும் தெளிவாக புலிகளுக்கு தெரிந்தது
எனவே எப்படியாவது இதை குழப்பி விடவேண்டும்
மக்கள் பழையபடி ஐயோ அம்மா என்று கதறிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடித்திரியவேண்டும்.
புலிகள்தான் மக்களை காக்கவேண்டும் என்ற நிலை வரவேண்டும் என்று மனப்பால் குடித்தார்கள் புலிகள்
ஆனால் அந்த ஆசை மட்டும் ஒருபோதும் நிறைவேறவில்லை
ஓடிய புலிகள் ஓடியதுதான்
மக்கள் இலங்கை அரசோடு ஒரு சுமுகமான உறவை நிலை நிறுத்திக் கொண்டார்கள்
பள்ளிக்கூடங்களும் பல்கலை கழகமும் ஒழுங்காக இயங்கியதால் யாழ்ப்பாண சமூகம் கல்வியில் முன்னேறி தங்களின் பாரம்பரியத்தை தக்கவைத்து கொண்டது .
அன்று சந்திரிகா அம்மையார் யாழ்ப்பாணத்தை தக்கவைத்து கொண்டதால் மட்டுமே இன்று யாழ் சமூகம் தங்களை தக்கவைத்து கொண்டது என்றால் மிகையில்லை.
அங்கு இப்போது டாக்டர்களுக்கும் எஞ்சினியர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் கணக்காய்வாளர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் பஞ்சம் இல்லை.
அன்று 1995 யாழ்ப்பாணத்தை இலங்கை அரசு மீட்டிருக்காது விட்டால் அது இன்னொரு முள்ளிவாய்காலாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எந்தவித மக்கள் நலன் சார்ந்த கொள்கையும் திட்டமிடலும் இன்றி,
வெறும் ஆயுத வீரசாகசம் மட்டுமே விடுதலை பெற்று தராது என்பதை காலம் இன்று தெளிவாக படம் பிடித்து காட்டி இருக்கிறது

1 கருத்து:
தமிழர்கள் இப்போது புலிகளை விட்டுவிட்டு நடிகர் களை பிடித்துக் கொண்டார்கள்
இதற்கு அது எவ்வளவோ தேவலாம்
கருத்துரையிடுக