திங்கள், 6 ஜூலை, 2026

இந்தியாவின் தண்ணீரை குடிக்க மறுத்த ஜப்பானிய பிரதமர்

 Maniam Shanmugam : இந்தியாவின்  தண்ணீரை  தவிர்த்த ஜப்பானிய பிரதமர்!
ஜப்பானிய பிரதமர் சனாய் டகாயிச்சி அண்மையில் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அந்த வருகையின் போது சில சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்ததாக சீனாவில் இருந்து வெளியாகும் 'குளொபல் ரைம்ஸ்' ஏடு சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்து ஏடு கூறியதாவது:
"இந்தியப் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை புன்னகையுடன் வாழ்த்தி, அவரைத் தனது "மூத்த சகோதரர்" என்று அழைத்தார். இருப்பினும், உள்ளூர் குழாய் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்ட பின்னர், ஜப்பானிய தூதுக்குழு அரசு விமானத்தில் பாட்டில் தண்ணீரை எடுத்து வந்ததாக ஜப்பானிய ஊடக நிறுவனம் ஒன்று பின்னர் செய்தி வெளியிட்டது. சில பார்வையாளர்களின் பார்வையில், இந்த முரண்பாடான நடத்தை இந்தியாவின் மீதான ஜப்பானின் உணர்வற்ற, முறையான மற்றும் அவமதிக்கும் மனப்பான்மையைக் காட்டுகிறது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.


''இந்தியாவில் தூதுக்குழு தங்கியிருந்தபோது ஜப்பான் அரசு சுகாதாரம் தொடர்பான கடுமையான வழிகாட்டுதல்களை பிறப்பித்ததாக ஜப்பானிய ஊடகமான 'அபெமா டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில் எந்தவொரு சூழ்நிலையிலும் குழாய் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது, வாய் கொப்பளிப்பதற்குக் கூட அதைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. குடிப்பதற்கும் வாய் சுத்தத்துக்கும் தேவையான அனைத்துத் தேவைகளுக்கும் பாட்டில் மினரல் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்தது. புறப்படுவதற்கு முன்பு அரசு விமானத்தில் பெருமளவில் மினரல் வாட்டர் ஏற்றப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது,'' என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது

கருத்துகள் இல்லை: