ஞாயிறு, 18 அக்டோபர், 2020

டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டம்: சீரம் நிறுவனம் தகவல்..!!

Add caption
dhinakaran :டெல்லி: உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வ்ரும் கொரோனா தொற்று டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவை தடுக்க கூட்டாக ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சீரம் இன்ஸ்டிடியூட், ஒரே நேரத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பையும், உலக சுகாதார நிறுவனத்தையும் நாட முயற்சி செய்கிறது. இதனால் நேரம் மிச்சமாகும். இதெல்லாம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சரியாக நடந்து விட்டால் தடுப்பூசி திரளான மக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும்.

மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்ததும் வெளியீடு தொடங்கிவிடும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்க சீரம் மருந்து நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவன செயல் இயக்குனர் சுரேஷ் ஜாதவ் கூறியதாவது: கொரோனா தொற்றுக்கு எதிரான 5 விதமான தடுப்பூசிகளை தங்களது நிறுவனம் பரிசோதித்து வருவதாக குறிப்பிட்டார். முடிவுகளின் அடிப்படையில் சரியான மருந்தின் உற்பத்தி தொடங்கப்பட்டு, தலைமை மருந்து கட்டுப்பாட்டளரின் அனுமதி கிடைத்ததும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: