திங்கள், 27 ஏப்ரல், 2026

2026சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் வதந்தி பதிவுகளும்

May be an image of text that says "27/04/2026 2026 வாக்குப்பதிவும் வதந்திகளும்! இன்றைய செய்தி நாளைய வரலாறு முரசொலி ചലോபමലෝ MiGBATONE நாமாக பம்ல்து ருப்பிறம் ரருப்பு ស្រមម្ស தமிழா លងាត நிறுவனர்: கலைஞர் மு. கருணாநிதி தீங்கள்கிழமை 27.04.2026"

 முரசொலி_தலையங்கம் 27/04/26  :  ஏப்­ரல் 23 நடை­பெற்ற தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வர­லாறு காணாத வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றுள்­ளது. 84.51 விழுக்­காடு வாக்­கு­கள் பதி­வாகி இருக்­கி­றது. 
ஒவ்­வொரு தேர்­த­லி­லும் வாக்­குப்­ப­தி­வா­னது அதி­க­ரித்தே வரு­கி­றது. அந்த வகை­யில் இந்­தத் தேர்­த­லி­லும் வாக்­குப்­ப­திவு அதி­க­ரித்­துள்­ளது. 
ஆனால், இதை வைத்து பல்­வேறு வதந்­தி­களை பல­ரும் கிளப்பி வரு­கி­றார்­கள். 
ஆளும்­கட்சி மீதான கோபம்’ என்று சில சில்­ல­றை­கள் முட்­டாள் தன­மாக ஊட­கங்­க­ளில் ஊளை­யிட்டு வரு­கி­றார்­கள்.
கடந்த தேர்­தலை விட 30 லட்­சம் வாக்­கு­கள் மட்­டுமே அதி­கம் ஆகி இருக்­கி­றது.


இளை­ஞர்­கள், புதிய வாக்­கா­ளர்­கள் வாக்கு இந்த தேர்­த­லில் அதி­கம் ஆகி­விட்­டது என்று சொல்­வ­தும் உண்­மை­யல்ல. அனைத்து தேர்­த­லி­லும் இளை­ஞர்­கள், புதிய வாக்­கா­ளர்­கள் வாக்கு அதி­க­மாகி வரு­கி­றது. படித்­த­வர்­கள் அதி­க­மா­வ­தும், வேலைக்­குச் செல்­ப­வர்­கள் அதி­க­மா­வ­தும், அதன் மூல­மாக அர­சி­யல் விழிப்­பு­ணர்வு பெற்­ற­வர்­கள் அதி­க­மா­வ­தும் வழக்­க­மா­ன­து­தான். இத­னால் வாக்­க­ளிப்­ப­வர்­க­ளும் அதி­க­மாகி வரு­கி­றார்­கள்.
விழுக்­கா­டுக்­கும் எண்­ணிக்­கைக்­கும் இருக்­கும் வேறு­பாட்­டைப் பார்த்­தால் அதி­க­மான அள­வுக்கு வாக்­கு­கள் பதி­வா­க­வில்லை என்­று­தான் சொல்ல வேண்­டும்.
சென்­னை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் 2021 தேர்­த­லில் 24.16 லட்­சம் பேர் வாக்­க­ளித்­தார்­கள். இந்த முறை 23.68 லட்­சம் பேர் தான் வாக்­க­ளித்­துள்ளார்­கள்.
வட மாவட்­டங்­க­ளில் 2021 தேர்­த­லில் 1.32 கோடி பேர் வாக்­க­ளித்­தார்­கள். இந்த முறை 1.38 கோடி பேர் வாக்­க­ளித்­துள்­ளார்­கள்.
மத்­திய மாவட்­டங்­க­ளில் 2021 தேர்­த­லில் 80.82 லட்­சம் பேர் வாக்­க­ளித்­தார்­கள். இந்த முறை 80.64 லட்­சம் பேர்­தான் வாக்­க­ளித்­துள்­ளார்­கள்.
மேற்கு மாவட்­டங்­க­ளில் 2021 தேர்­த­லில் 1.16 கோடி பேர் வாக்­க­ளித்­தார்­கள். இந்த முறை 1.21 கோடி பேர் வாக்­க­ளித்­துள்­ளார்­கள்.
தென் மாவட்­டங்­க­ளில் 2021 தேர்­த­லில் 1.11 கோடி பேர் வாக்­க­ளித்­தார்­கள். இந்த முறை 1.17 கோடி பேர் வாக்­க­ளித்­துள்­ளார்­கள்.
விழுக்­காடு அடிப்­ப­டை­யில் கூடி­னா­லும், எண்­ணிக்கை என்­பது அவ்­வளவு அதி­கம் அல்ல. கடந்த 15 ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் குறைந்த அள­வில் வாக்­கு­கள் பதி­வா­னது இப்­போ­து­தான் என்று ‘தி இந்து’ ஆங்­கில நாளேடு எழுதி உள்­ளது. விழுக்­காடு அடிப்­ப­டை­யில் அதி­கம் என்­றா­லும் எண்­ணிக்கை அடிப்­ப­டை­யில் குறைவு தான் என்­பதை விரி­வாக எழுதி இருக்­கி­றது ‘தி இந்து’.
வாக்­கா­ளர் பட்­டி­யலை சுத்­தம் ஆக்­கி­ய­து­தான் முதல் கார­ணம். SIR என்ற பெய­ரால் ஒரு சதி நடக்க இருந்­தது. அத­னைத் தடுத்­த­தும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கமே.
SIR ஐ வைத்து பீகா­ரில் லட்­சக்­க­ணக்­கான வாக்­கு­களை நீக்­கி­னார்­கள். உண்­மை­யில் இறந்­த­வர்­கள், இடம் பெயர்ந்­த­வர்­கள், இரண்டு இடங்­களில் பேர் இருப்­ப­வர்­கள் என நீக்­கி­னால் நம்­மி­டம் எதிர்ப்பு இல்லை. ஆனால் மொத்­தம் மொத்­த­மாக நீக்­கி­னார்­கள் பீகா­ரில். ஒரு தொகு­தி­யில் பட்­டி­ய­லின மக்­களை நீக்­கி­னார்­கள். இன்­னொரு தொகு­தி­யில் இசு­லா­மிய மக்­களை நீக்­கி­னார்­கள்.
பீகா­ரில் லட்­சக்­க­ணக்­கான வாக்­கா­ளர் பெயர் நீக்­கம், அரி­யா­னா­வில் 25 லட்­சம் போலி வாக்­கா­ளர்­கள் சேர்க்­கப்­பட்­டது, பிரே­சில் பெண் ஒரு­வரது பெயர் அரி­யானா மாநில வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருப்­பது, மகா­ராஷ்­டிரா தேர்­தல் மோசடி, கர்­நா­டகா மகா­தேவ்­புரா தொகுதி போலி வாக்­கா­ளர் சேர்ப்பு என்று பல்­வேறு மாநி­லங்­க­ளில் பல­வி­த­மான மோச­டி­கள் நடந்­தது. இவை எது­வும் தமிழ்­நாட்­டில் நடந்­து­வி­டா­மல் தடுத்­தது தி.மு.க.
“தேர்­தல் ஆணை­யத்­தின் அறி­விப்­பில் உள்ள குறை­கள் களை­யப்­பட வேண்­டும். உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் வழி­காட்­டு­தலை வெளிப்­ப­டை­யாக கடைப்­பி­டிக்க வேண்­டும். உரிய அவ­கா­சம் தரப்­பட வேண்­டும். எக்­கட்­சிக்­கும் சார்­பற்ற நிலை­யில் தேர்­தல் ஆணை­யம் முத­லில் தன் மீதான நம்­பிக்­கையை நிலை நிறுத்­திக் கொள்ள முன் வர­வேண்­டும். அதன் பிறகு முறைப்­படி பின் வரும் காலங்­க­ளில் சிறப்பு தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் சீராய்வு (S.I.R.) நடத்­த­லாம்”என்று அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் கூட்டி தீர்­மா­னித்­தது தி.மு.க. உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது. தேர்­தல் ஆணை­யம் தனது வேலையை நிறுத்­தா­மல் தொடர்ந்­தது. இந்த நிலை­யில் தேர்­தல் ஆணை­யத்தை கண்­கா­ணித்­தது தி.மு.க. அந்­தப் பணி­க­ளோடு தன்னை இணைத்­துக் கொண்­டது தி.மு.க.
S.I.R நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பிறகு தமிழ்­நாட்­டின் வரைவு வாக்­கா­ளர் பட்­டி­யல் வெளி­யா­னது. 97 லட்­சத்து 37 ஆயி­ரத்து 831 வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்­ட­தாக தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­தது. இரட்­டைப் பதிவு உள்­ள­வர்­க­ளாக 3 லட்­சத்து 98 ஆயி­ரத்து 278 பேர், உயி­ரி­ழந்­த­வர்­க­ளாக 26 லட்­சத்து 94 ஆயி­ரத்து 672 பேர், 66 லட்­சத்து 44 ஆயி­ரத்து 881 பேர் இடம் பெயர்ந்­த­வர்­கள் என அறி­விக்­கப்­பட்­டது. SIR பணி­களை தி.மு.க. தீவி­ர­மாக கண்­கா­ணித்­த­தால், அதில் பெரிய அள­வில் எதை­யும் தேர்­தல் ஆணை­யத்­தால் செய்ய முடி­ய­வில்லை.
பா.ஜ.க. ஆளும் மாநி­ல­மாக இருந்­தால் சதி செய்­தி­ருப்­பார்­கள். ஆனால் மேற்கு வங்­கத்­தில் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் ஆட்­சியை மீறி பல்­வேறு சதி­க­ளைச் செய்து விட்­ட­தாக அம்­மா­நில முத­ல­மைச்­சர் மம்தா பானர்ஜி குற்­றம் சாட்டி வரு­கி­றார். அது போன்ற நிலைமை தமிழ்­நாட்­டில் இல்லை.
கடந்த தேர்­த­லில் 6.41 கோடி­யாக இருந்த வாக்­கா­ளர் பட்­டி­யல், இந்த தேர்­த­லில் 5.73 கோடி­யா­கக் குறைந்­தது. இறந்­த­வர்­கள், இடம்­பெ­யர்ந்­த­வர்­கள், இரட்­டைப் பதிவு பெற்­ற­வர்­கள் நீக்­கப்­பட்­டதே இதற்­குக் கார­ணம். இந்த வகை­யில் பார்த்­தால், கடந்த தேர்­த­லுக்­கும் இந்த தேர்­த­லுக்­கு­மான வாக்­களித்­த­வர் எண்­ணிக்கை ஓர­ளவு சமம் தான்.
விழுக்­காடு கணக்கை வைத்­துக் கொண்டு, ‘ஏதோ தங்­க­ளால் தான் வாக்­குப்­ப­திவு அதி­க­மா­னது’ என்று தற்­கு­றித்­த­ன­மாக ஒரு­வர் அறிக்­கை­வி­டு­வது எல்­லாம் அறி­யா­மையே தவிர வேறல்ல. தலை சுற்றி விழும் போது, உல­கமே தன்­னால் சுற்­று­வ­தாக நினைக்­கும் முட்­டாள் தனமே ஆகும்.

கருத்துகள் இல்லை: