சனி, 16 நவம்பர், 2019

வடநாட்டு டி டி ஆரின் அடாவடிக்கு சிதம்பரம் சரவணன் உயிரிழப்பு!

குபேரன் பதிவுகள் K Ambethkar : வடநாட்டான் அடாவடிக்கு சிதம்பரம் சரவணன் பலி.!
தியாகு தேநீர் மைய உதவியாளர் சரவணன் மறைவு ..
ஆழ்ந்த இரங்கல்கள்..
சிதம்பரம் காசுக்கடைதெருவில் இயங்கிவரும் தியாகு தேநீர் மையத்தில் ரவி அவர்களுக்கு உதவியாளராகவும் இந்த பகுதியில் பலருக்கு பரிட்சையமானவர் சரவணன்.
இன்று காலை கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவரது வயது முதிர்ந்த தாயுடன் சரவணன் விழுப்புரம் சென்றிருக்கிறார்கள்.
ரயில் புறப்பட ஆரம்பித்ததால் அவர்கள் அவசரத்தில் முன்பதிவு கம்பார்ட்மெண்டில் ஏறி விட்டார்கள்.
ரயில் திருப்பாப்புலியூர் வரும்பொழுது அதில் வந்த ஒரு வடநாட்டு டிடிஆர் அவர்களை வலுக்கட்டாயமாக இறங்க சொல்லியிருக்கிறார்.
அவர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடுவோம் என்று சரவணனும் அவரது தாயாரும் சொன்னது இந்திகார டி.டி.ஆர் க்கு புரியவில்லை.
இதனால் ரயிலிலிருந்து வலுகட்டாயமாக
டிடிஆர் இறக்கி விட்டுள்ளார்.
இதனால் இரயிலிருந்து இறங்கி
தாயும் மகனும் சேர்ந்து முன்பதிவு இல்லாத பெட்டியை ஏற முற்படும்போது மகன் ஏறிவிட்டார்.

வயது மூப்பு காரணமாக தாயால் ஏற முடியவில்லை.
இதனால் தாய் ஏறவில்லையே என்று தானும் இறங்கும் போது ரயில் படிக்கட்டில் உள்ளே சிக்கிக்கொண்டு தனது இரு கால்களையும் இழந்து சிறிதுநேரத்தில் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளது.
சிறு செயல் தானே என்று மனிதாபிமானம் இல்லாமல் செய்யும் தவறுகளால் பெரிய உயிரிழப்பு ஏற்படுவது மிக மன வருத்தமாக இருக்கிறது.
நமக்கான சேவையை நமக்கான தேவைக்கான ஆள் நாம் பேசும் மொழியில் இருப்பதும் அதைவிட மனிதாபிமானம் உள்ளவர்கள் இருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்..!
இந்தனைக்கும் சரவணன் சிறிது நிதானித்து சிறிது புரிந்துகொள்ளவும், விரைவாக நடக்கவும் சிரமப்படுபவர். மனவளர்ச்சி குன்றியவர். இது அவரை பார்த்தாலே தெரியும். அவரையும் அவரது தாயின் நிலையையும் கருத்தில் கொண்டு பயணிக்க அவர்களுக்கு ஏற்பாடு செய்துதரவேண்டிய அதிகாரியின் அடாவடியால் இப்படி ஒரு மரணம் நிகழ்ந்திருப்பது வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது. சரணவண் மறைவுக்கு காரணமான டி.டி ஆர் ஐ கைதுசெய்ய வேண்டும்.
சமூகத்தில் தேற்றப்பட வேண்டியவர்கள் புறக்கணிக்கப்பட்டு பலியாவதும், ரவுடிகள், சமூக விரோதிகள் கவலையற்று வாழ்வதும் வெட்கக்கேடான ஒன்று.
ஓடியாடிக்கொண்டே ஓயாது உழைத்த அந்த ஆன்மா இளைப்பாரட்டும்..!
ஆழ்ந்த இரங்கல்கள்.
குபேரன் பதிவுகள் K Ambethkar

கருத்துகள் இல்லை: