வெள்ளி, 15 நவம்பர், 2019

மகாராஷ்டிரா .. பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிவசேனா , காங்கிரஸ் . தேசியவாத காங்கிரஸ் ஆட்சி ..?

tamil.samayam.com :
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன், சிவசேனா தலைமையில் மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல், தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. சிவசேனாவோட பேசி ஒரு முடிவுக்கு வந்திடுச்சாம் காங்கிரஸ் ! இனியாவது ஆட்சி அமைப்பா...
பாஜக ,சிவசேனா கட்சிகளுக்கிடையே அதிகார பகிர்வில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவால் மீண்டும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன், சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் சோதப்பியதால், சிவசேனாவாலும் அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அத்துடன், மகாராஷ்டிரத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா
இந்த நிலையில், தங்களுக்குள் குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து, அதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோருவதென சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அதன்படி, குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பது தொடர்பான முக்கியமான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிருத்வி சவான், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட மூன்று கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், விவசாய கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு திட்டத்தை மறு ஆய்வு செய்வது. விவசாய விலைப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் – சிவசேனை பேச்சுவார்த்தை

இறுதியில் நான்கு பக்கங்கள் கொண்ட குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கான வரைவறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோரின் பார்வைக்கு அனுப்பப்பட உள்ளது. அவர்களின் ஆலோசனைபடி, வரைவறிக்கையில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்பட்டு, குறைந்தபட்ச செயல் திட்டம் இறுதி செய்யப்படும்.

அதன் பின்னர், மூன்று கட்சிகளின் நிர்வாகிகளும் கூட்டாக சென்று, மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்படும் என்று பிருத்வி சவான் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து, மகாராஷ்டிர மாநில அரசியல்
களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை: