சனி, 13 ஏப்ரல், 2019

கமலுக்கு அனிதாவின் அண்ணன் பதில் : நீட் விலக்கை உறுதி செய்யும் ஒரே கட்சி தி.மு.க மட்டுமே.

அனிதாவின் சகோதரர்மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி தி.மு.க மட்டுமே. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
கமல்ஹாசனுடன் அனிதாவின் சகோதரர்vikatan.com - மலையரசு : தேர்தலில், மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் கமல், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிரசார வீடியோவை வெளியிட்டு மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் நேற்று தனது வலைதளபக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட அவர், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். மேலும் அதில், ``மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு ஓட்டு போடணும்னு" என்று கூறியிருந்தார்.

கமலின் இந்தக் கேள்விக்கு தற்போது அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ``அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான். நடிப்புக்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞர், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதைச் செய்யும் துணிச்சல்காரர். ரசிகர் மன்றங்களைக் கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்ததானம் செய்துள்ளேன். உடல்தானம் செய்துள்ளேன்.
புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமலுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் என் வாழ்த்துகள். அண்ணன் கமல் சொன்னதுபோல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம். அது பாசிச பா.ஜ.க கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது, என்பதில் தெளிவாகவே இருக்கிறோம். அனிதா இறந்தபோது `திருமாவளவன் இதைச் சும்மா விடக் கூடாது’ எனத் தாங்கள் கூறிய அதே திருமாவளவன்தான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்.
மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி தி.மு.க மட்டுமே. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, ஆதலால், எங்களின் வாக்கு தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும்தான்" எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: