
தந்தையின் ஆதரவில் கொல்லைப்புறம் வழியாக அரசியலுக்கு வந்தவர் என ஸ்டாலினை கேவலப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். நாம் திருப்பி பேசினால் ஸ்டாலினுக்கு காது சவ்வு கிழிந்துபோய்விடும்” என்றும் தெரிவித்தார்.
முன்பாக கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து வேடச்சந்தூர் பகுதியில் பேசியபோது, திமுக காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக சாடினார். அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் காவிரி-கோதாவரி நீர் இணைப்பு திட்டத்துக்காக குரல் எழுப்புவோம் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக. அக்கட்சியின் நிர்வாகிகள் ஒழுங்காக இருந்தாலே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற அவர், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தமிழகத்திற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்று சாடினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக