
91
நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா
சட்டசபை தேர்தலிலும் நேற்று முன்தினம் மாலை அனல் பறக்கும் பிரசாரம்
முடிந்தது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடப்பதையொட்டி விரிவான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்காளம்,
அந்தமான், லட்சத்தீவுகளில் காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள ஓட்டுப்பதிவு மாலை
6 மணிக்கு முடிகிறது.
ஆந்திராவில் அரக்கு
நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற
இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு
முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில்
சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து
விடும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காலை 7 மணிக்கு
தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரையிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஒடிசா, பீகார், சத்தீஷ்கார், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய
மாநிலங்களில் ஓட்டுப்பதிவு 7 மணிக்கு தொடங்கியுள்ள போதிலும், முடிவது மாலை 3
மணி முதல் 5 மணி வரை இடத்துக்கு தக்கவாறு அமைகிறது. நக்சலைட்டுகள்
ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம்,
மிசோரம், சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகியவற்றில்
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரையில் வாக்குப்பதிவு
இடைவெளியின்றி தொடர்ந்து நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக