
வினவு களச் செய்தியாளர்: / ஆயிரக்கணக்கான மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்கிறார்கள். அதனை வெறித்துப் பார்த்தவாறு ஒரு ஓரமாக கிடக்கிறார்கள் ஃப்ளோரசண்ட் கலரில் ஜாக்கெட் அணிந்து கழிப்பறையை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள். மற்றொருபுறம் கையில் துடைப்பத்தை ஏந்தியபடி எங்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்காக சுமார் 1.2 இலட்சம் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. துப்புரவு மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக சுமார் 15,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அலகாபாத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கும் இத்தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தலித்துகள் மற்றும் பழங்குடிகள்.

எங்களை கூப்பிடும்போது இந்த வேலைதான்னு சொல்லி கூப்பிடல. சொல்லியிருந்தா வந்திருக்க மாட்டோம். இப்ப போகலாம்னு பார்த்தாலும் முடியாது. வீட்டுல சொல்லிட்டு வந்துட்டோம். அவங்க எதிர்பார்த்திட்டு இருப்பாங்க. வேற வழியும் இல்லை” என்கிறார் அசன்.

சாப்பிட இரண்டு ரொட்டி, சப்ஜி – பருப்பு சாம்பார்ன்ற பேர்ல தண்ணிய ஒரு நேரம் கொடுக்கிறாங்க’’ என்கிறார் அலுப்பாக.
» “வேற என்ன பிரச்சனையெல்லாம் இருக்கு?”

எங்க ஊரில் விவசாய வேலை செய்து கொண்டு இருந்தோம். ஆனால், அதில் இப்போது வருமானம் இல்லை என்பதால் இந்த வேலைக்கு வந்தோம். இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம். வீட்ல இப்ப கைகொடுக்கிறது ஒரே ஒரு மாடுதான். அதுவும் பால் கறக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லை. பின்னால் அதை விற்க முடியாது. விற்க பலரும் பயப்படுறாங்க..
» கங்கையில குளிச்சிங்களா?
இன்னும் குளிக்கல. போகும்போது குளிப்போம்.
» குளிச்சா பாவம் போயிடுமா?
ஆண்டவன் என்ன எழுதி வச்சிருக்கானோ அதுதான் நடக்கும். நாம நல்லது செஞ்சா
நல்லது நடக்கும். கெட்டது செஞ்சா கெட்டது நடக்கும். எல்லாத்துக்கும் மேல
கடவுள் இருக்கான்” என்றவரிடமிருந்து விடைபெற்று சிறிது தூரம் நடந்ததும்
மற்றொரு பிரிவு துப்புரவு தொழிலாளர்கள் சச்சின், தினேஷ், சுனில் மோங்க்ரே
நின்று பேசிக்கொண்டிருந்தனர்.படிக்க:
♦ புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
♦ கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !
குளிப்பது எல்லாம் குழாயில் தண்ணீர் பிடித்து குளித்துக் கொள்ள வேண்டும். கொட்டிக் கிடக்கும் குப்பையை அகற்றுவது மட்டும் இல்லாமல், இரும்புப் பாதையை அடிக்கடி பெருக்க வேண்டும். மற்றொரு பிரிவினர் தண்ணீர் தெளிக்க வேண்டும். எந்நேரமும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். எங்குச் சென்றாலும் கையில் துடைப்பத்துடன் சுற்ற வேண்டும். இந்த வேலை முடிந்ததும் ஊருக்கு சென்று அங்கே கிடைக்கும் வேலையை செய்து வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்றே தெரிவிக்கின்றனர்.
இவர்களை அழைத்து வந்த சுனில் மோங்க்ரே சொல்கிறார், “நான் மும்பை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் மிக்சர் செய்யும் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் நல்ல வருமானம் கிடைத்தது.

கும்பமேளா துப்புரவு பணியில் சூப்பர் வைசராக இருக்கிறேன். இந்த வேலைக்கு எங்க ஊரில் இருந்து 12 பேரை கூட்டி வந்தேன். எல்லோரும் தலித் சாதியின் மோங்க்ரே பிரிவை சார்ந்தவர்கள்.
» இந்த பிரிவில் இருந்துதான் துப்புரவு வேலைக்கு வருவார்களா?
ஆம். இன்னும் சில தலித் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களும் வந்திருக்கிறர்கள்.
» உங்களுக்கு அம்பேட்கரை தெரியுமா?
தெரியும். அவர்தான் எங்க தலைவர். அவர் இருந்ததால் தான் இந்த நிலையில்
இருக்கிறோம். இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருப்போம்.’’ என்றார்.
» இந்த கும்பமேளா எப்படி இருக்கு?
சூப்பரா இருக்கு. ரொம்ப பேரு வாராங்க. பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு.
» இந்த விழாவுக்காக எவ்ளோ செலவாகியிருக்கும்னு நினைக்கிறீங்க?
“ஒரு 30, 40 கோடி இருக்குமா?” என்று சந்தேகத்துடன் வெகுளியாக சொன்னவரிடம் 4,300 கோடி என்றதும் மலைத்துப் போய் பார்த்தார்.
» உங்களுக்கு இந்த வேலை புடிச்சிருக்கா?
“எனக்கு சுத்தமா இந்த வேலை புடிக்கல.. எனக்கு வண்டி ஓட்டுற வேலை. அந்த
வேலை இல்லாததால இந்த வேலைக்கு வந்தேன். எங்கள மாதிரியான ஆட்கள் நெறைய பேர்
இந்த வேலைய செய்யுறோம். என்னா செய்றது வேலை எதுவும் இல்ல….” என்று
சொல்லும்போது அவருடைய சூப்பர்வைசர் வந்ததால் நம்மிடமிருந்து விலகிச்
சென்றார்.
» ஏன் இந்த வேலைக்கு வந்திங்க?
என்ன கேள்வி கேக்குற … அங்க என்னமோ வேலைய வச்சிக்கிட்டு இந்த வேலைக்கு
வந்த மாதிரி கேக்குற… வேல இருந்தா இங்க வருவோமா…? நாங்க ஏன் குப்பை, மண்ணை
பெருக்க போறோம்?
» மோடி கவர்ன்மெண்ட்ல எல்லோருக்கும் நல்லது செய்யிறதா சொல்றாங்களே?
எதுவும் இல்ல. 15 லட்சம் கொடுகிறதா சொன்னாரு…. யாருக்கும் வர்ல. வீடு
கட்டி தருவோம்னு சொன்னாரு அதுவும் தரல.. . மோடி சும்மா எதையாவது
சொல்லுவார். மத்தபடி ஒன்னும் இல்ல. நாங்க ஏழ்மையானவங்க. மோடி நல்லது
செய்யிறாருன்னு எல்லோரும் சொல்லுறாங்க. ஆனா யாருக்கு செய்யிறாருன்னு
தெரியல. நாங்க ஏழையாவே தான் இருக்கோம்.அரசு கொடுத்திருந்த புளோரசெண்ட் ஜாக்கெட்டை காட்டி….. “எங்க துணிய பாருங்க. கொசு வலை மாதிரி கொடுத்து இருக்காங்க. கொசுகூட உள்ள போயிரும். கடிக்கும். இதுல தலைக்கு தொப்பி வேற… இது எதுக்கு பிரயோஜனம்? குளிரு தாங்கல. எனக்கு பரவாயில்ல… தோ… இந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு. ஆனாலும் வேலை செஞ்சிதான் ஆகனும். நாங்க போன வருஷம் இந்த மாதிரி வேலை செய்ய வந்தோம். அப்போ கடைசியில கொஞ்சம் காசு கொடுக்காம அனுப்பிட்டாங்க. இந்த முறை அதை கண்டிப்பா கேட்டிருக்கோம்.
» எல்லோரும் சங்கத்தில் குளித்து விட்டு போறாங்க… நீங்க குளிச்சிங்களா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக