இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ள நினைக்கும் திமுக தேமுதிக வைத் தன் பக்கம் இழுக்க நினைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்போது தேமுதிக விற்கு அதிகளவில் பேரம் பேசும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேமுதிக யார் முதலில் தாங்கள் கேட்கும் சீட்களோடு பேச்சுவார்த்தைக்கு வருகிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்ற முடிவில் இருக்கிறது.
இதையடுத்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் தேமுதிக வை விடவும் முடியாமல் அவர்கள் கேட்கும் தொகுதிகளைக் கொடுக்கவும் முடியாமல் குழம்பி வருகின்றனர். இதனையடுத்து இப்போது அதிமுக சார்பில் தேமுதிக கூட்டணி குறித்த முடிவு என்ன என்பதை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
அதில் ’தேமுதிக வோடுக் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம். வரவில்லையென்றால் வருத்தம் இல்லை ‘ எனத் தெரிவித்துள்ளார். ஜெயக்குமாரின் இந்த பதிலால் அதிமுக தேமுதிகவை விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக